நண்பர்கள்ளுக்கு என்று ஓர் அசத்தலான இணையதளம் !

ஒரு கல்லூரியில் அல்லது ஒரே ஊரில் உள்ள நண்பர்கள் வெளியூரில் இருக்கும் போது அனைவரையும் ஓன்லைன் மூலம் ஒன்று சேர்ப்பதற்கு உதவி புரிகிறது Faster Plan என்ற தளம்.என்ன தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட தினத்தில் பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திருமணத்திற்கு கூட செல்ல முடியாமல் இருக்கிறது.

இப்படி இருக்கும் நண்பர்களின் கூட்டத்திற்கு திட்டமிடுதலைப் பற்றியும் திட்டங்களை எப்படி செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பற்றியும் சொல்லி கொடுக்கிறது ஒரு தளம்.நண்பர்களை சந்திக்கலாம் அதுவும் வெகு விரைவில் சாத்தியமே இல்லை என்கிறீர்களா, சாத்தியம் இல்லாததை கூட திட்டமிட்டால் சாத்தியமாக்கலாம் என்கிறது இத்தளம்.
 
இத்தளத்திற்கு சென்று Start என்ற பொத்தானை சொடுக்கி நம் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து நாமும் நண்பர்களுடன் சேர திட்டமிட ஆரம்பிக்கலாம்.எப்படி என்றால் Find a Common Date என்பதை சொடுக்கி என்றைய தினத்தில் நம் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர் என்று எளிதாக அறியலாம், நாமும் அன்றைய தினத்தில் மற்ற வேலைகள் இல்லாது பார்த்துக் கொள்ளலாம்.
 
Add participant என்பதை சொடுக்கி நம் நண்பர்களையும் இந்த Faster Plan-ல் சேர்த்துக் கொள்ளலாம். யார் எப்போது என்ன இத்தளத்தில் பகிர்ந்து கொண்டாலும் அனைத்து நண்பர்களுக்கும் தகவலை உடனுக்கூடன் கொண்டு சேர்க்கும்.
 

உங்கள் ஜிமெயில் கணக்கை பாதுகாக்க !

மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் கணக்கு முதல் இடத்தில் உள்ளது. மின்னஞ்சல் வசதியை அடிக்கடி பயன்படுத்தாதவர்களும், எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு ஜிமெயில் கணக்கை வைத்திருப்பார்கள்.ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது “Last account activity” என அழைக்கப்படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால் உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.
கணணி பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது கைபேசி மூலமோ எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப்பட்டிருந்தாலும் அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.
 
வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப்பட்டிருந்தால் அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக்கின்றன.இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.
 
இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில்(பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது.இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை(பயனர் பெயர், கடவுச்சொல்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
 
எடுத்துக்காட்டாக நீங்கள் கைபேசி வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் கைத்தொலைபேசி வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் கணக்கு திருடு போயுள்ளது என அறியலாம்.அடுத்ததாக Location(IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் கணக்கை அணுகிய பத்து ஐ.பி முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால் உடனடியாக உங்கள் ஜிமெயில் கணக்கின் கடவுச்சொல்லினை மாற்றுவது நல்லது.
 
உங்களுடைய ஐ.பி முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்.எடுத்துக்காட்டாக 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன்படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும்.
 
அதே போல கைபேசி வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, கைபேசி வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.ஒரே நேரத்தில் இருவேறு கணணிகளில் இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் கணக்கினை அணுகினால் அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.
 
தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து கணக்கு பார்க்கப்பட்டதாக இருந்தால் அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.
 
உங்களுடைய கணக்கு தகவல்கள் திருடப்பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால் கடவுச்சொல்லை மாற்றுவதுடன் கூகுள் http://www.google.com/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும்.

உலகில் நீங்கள் எத்தனையாவது இடம் !

 உலக மக்கள்தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது.

பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது அந்த இணைப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள்.

மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம். 

 

இலவசமாக ஆங்கிலம் கற்க ஓர் சிறந்த இணையத்தளம் !

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.
காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான்.
என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது.
முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள்.ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது.
இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.விடியோ வடிவிலான குறும்பாடங்கள்.

கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள்ளலாம்.அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.

குறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்)என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை .சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா?

மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.வார்த்தை உச்சரிப்பு ,இலக்கண பயன்பாடு,கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.

மாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது.ஆனால் சுவையாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.

உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும்.இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடஙக்ள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம்.
கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை.ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு.இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம்.இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.

பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும்.சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம்.புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம்.
பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம்.

கூரும்பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்லவும் சுவையான வழிகள் இருக்கின்றன்.உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.இலக்கண பிழை உச்சரிப்பு போன்ற்வற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம்.வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம்.தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.

இதைவிட இனிய வழி ஆங்கிலம் கறக இருக முடியுமா என்ன
இந்த தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் நம்மவர்கள் இதில் அதிக பேர் உறுப்பினராக உள்ளனர்.

இணையதள முகவரி: http://classbites.com/

உங்களுக்கு வேலை வேண்டுமா இதோ ஓர் அசத்தலான இணையதளம்!

வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்!
அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.

நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன.இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ,குணா பட கமல் பாட்டு போல கொஞ்சம் மானே தேனே போட்டு கொள்ளுங்கள் என்று எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.

பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்க‌ளையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
நிற்க இந்த பதிவு நல்ல பயோடட்டாவை உருவாக்குவது எப்படி என்று வழிகாட்டுவடதற்கானது அல்ல;அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான ரெஸ்யும் பேக்கிங்கை அறிமுகம் செய்வதற்கானது.

பக்காவான ,செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து.அதையும் சுலபமாக,உடனடியாக செய்து தருகிறது.

இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை.அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.
வேலை தேடுபவரின் நோக்கம் ,கல்வி தகுதி,பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்ற‌ன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம்.துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான்.அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன.

பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம்.இது முதல் படி தான்.இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம்.இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தள‌ங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள‌லாம்.‌

ப‌யோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம்.வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும்.பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து.
 
வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.
இணையதள முகவரி: http://www.resumebaking.com/

ஒரே நாளில் ரா ஒன் சாதனை !

இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஷாருக் கானின் ரா.ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது.

படத்தின் இந்திப் பதிப்பு ரூ. 20 கோடியை ஈட்ட, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகள் தலா ரூ. 1 கோடியை ஈட்டியுள்ளன. ரூ. 145 கோடியில் ஷாருக் தயாரித்துள்ள இந்தப் படம் நாட்டின் பெரும்பான்மையான மல்டி பிளக்ஸ்களில் 20 சதவீதம் அதிகமான டிக்கெட் விலையுடன் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சல்மான் கானின் பாடிகார்ட் நாடு முழுவதும் 2,700 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு ஒரே நாளில் ரூ. 21 கோடியை வசூலித்தது. இது தான் இதுவரை இந்திப் படத்தின் ரெக்கார்ட் பிரேக்காக இருந்தது. இதை முறியடித்துள்ளது ரா.ஒன் என்கிறார்கள்.



பாடிகார்ட் ரிலீசான முதல் 5 நாட்களில் ரூ. 80 கோடியை ஈட்டியது. ரா.ஒன் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள்.

ஒரு நிமிடத்தில் உங்கள் புகைப்படங்களை அழகாக்க!

இணையத்தில் உங்கள் புகைப்படங்களை மெருகேற்ற பயணுள்ள 20
வலைத்தளங்கள்..இத்தளங்கள் அனைத்திற்கும் தமிழ் விளக்கங்கள் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.ஏனெனில் இங்கு எல்லோருக்கும் அடிப்படை ஆங்கிலம் தெரியும் முக்கியமா இதற்கெல்லாம் கதை சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

கீழுள்ள பெரும்பாலான வலைத்தளங்களில் உங்கள் புகைப்படங்களை அப்லோட் செய்ய வேண்டி இருக்கும். நீங்களே அனுபவித்து பாருங்களேன்.!!!


இதில் நான் செயற்படுத்தி பரிந்துரைப்பது இரண்டு மிகச்சிறந்த வலைத்தளங்கள்

அவை
1.photofunia
2.jpgfun

இவை இரண்டும் மிகச்சிறந்த தளங்கள்.மற்ற தளங்களை உபயோகித்து பார்க்கவில்லை.இவை உங்களுக்கு மிகவும் பயணளிக்கும் என நம்புகிறேன்:))


அந்தந்த வலைத்தளங்கள் தங்கள் பக்கத்தில் கொடுத்துள்ள தகவல்கள் அப்படியே:-


1.Apply some amazing effects through PhotoFunia to make your photos unique and fun. In short, PhotoFunia allows you to upload your own pictures and modify it into a selected effect without bells and whistles.

http://photofunia.com/

2.Upload a photograph of yourself so u can add special effects to spruce up your precious digital moments....

http://www.fototrix.com/

3.Customize text on any image (huh?)! Make custom clipart and e-cards, just choose a template!

http://www.txt2pic.com/

4.Imagechef got the largest database to work over. This site got tons of templates to edit your pics.

http://www.imagechef.com/

5. Create a photo mosaic of your choice for free online…

http://www.picartia.com/

6.Turn your photos into incredible artwork with one click...

http://www.befunky.com/.

7.Make funny pictures online...

http://funphotobox.com/.

8.Dumpr is where you create marvellous photos to share with your friends...

http://www.dumpr.net/.

9.Montagraph is a social platform to give you an easy way to make and share your photo montages.

http://www.montagraph.com/Views/Main.aspx.

10.Create funny pics from your photos!!!

http://funny.pho.to/.

11.Create your own personalized money bill at the click of a mouse button...

http://www.festisite.com/money/.

12.Add graphics to ur images.

http://blingee.com/blingee
.
13.place ur face on other bodies.
http://www.faceinhole.com/us/.

14.make your image more interesting, unique and attractive...

http://anymaking.com/?obj=funny-photo-effects.

15.Just select effects, upload your pic click on save and turn your pics with a wide range of effects.

http://funphotobox.com/.

16.Upload your pics and turn them into yearbook alike black & white old school pics. The service is paused and will be back this Summer.

http://yearbookyourself.com/.

17.You can make it funny using LoonaPic effect or embed your face from the photo to the various templates, add photo frame or just trim it.

http://www.loonapix.com/.

18.Want see your self on the cover page of worlds greatest magazines? Then iTechnoBuzz refers magmypic for your dreams. Simply upload your pics and select the magazines and you are done.

http://www.magmypic.com/.

19.All you need to do, is upload your picture on the left side and select a picture in right side and mix ur hairs up..

http://www.hairmixer.com/.

20.We find writeonit quite interesting ,here you can easily create your fake pictures, captions and fake magazines and other funny jokes for you and your friends.

http://www.writeonit.org/.

கணனியின் வேகத்தை அதிகரிக்க ஒரு மென்பொருள்

உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா உங்கள் கணினி ஸ்பீட் ஆக வேண்டுமா சில கணினிகள் மெதுவாக இயங்கும்.சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும்.அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை.ஆனால் இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட
ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC

  • இதை உங்கள் கணினியில் நிறுவினால் மெதுவான கணினியும் வேகம் பெறும்.
  • இந்த SPEED UP MY PC மென்பொருளை தரவிறக்க சுட்டி

அசத்தலான சாம்சுங் ஸ்மார்ட் போன் அறிமுகம் !

ஆம்னி டபிள்யூ, வேவ் 3 மற்றும் கேலக்ஸி வை என்ற புதிய மொபைல்களை களமிறக்கியுள்ளது சாம்சங் நிறுவனம்.

இந்த சாம்சங் ஆம்னி மொபைல் டபிள்யூ விண்டேஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது. 115.3 கிராம் இலகு எடை கொண்டது. பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆம்னி மொபைலில் 512 எம்பி ரேம் வசதியும், 8ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு 3.7 இஞ்ச் டபிள்யூ விஜிஏ சூப்பர் அமோல்டு திரை கொண்டுள்ளது. ஆக்ஸிலரோமீட்டர், மேக்னட்டோமீட்டர், கிரையோஸ்கோப், பிராக்ஸிமிட்டி, ஆம்பியன்ட் லைட் போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.


இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் ஒரு விஜிஏ கேமரா என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் துல்லியத்திற்கு குறையே இல்லை.


அதோடு புளூடூத் வி 2.1, யூஎஸ்பி 2.0 போர்ட், வைபை போன்ற வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஜிபிஆர்எஸ், எட்ஜ் கேப்பபிலிட்டி போன்ற வசதிகளையும் இதன் மூலம் பெற முடியும். இத்தகைய வசதி கொண்ட இந்த மொபைல் ரூ.19,990 விலை கொண்டது.


சாம்சங்நிறுவனத்தின் இன்னொரு படைப்பான வேவ்-3 ஸ்மார்ட் மொபைலில் 1.4 எம்எச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது 4ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்டது. இந்த மெமரி வசதியை 32ஜிபி வரை வேண்டுமாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.


சாம்சங்வேவ்-3 மொபைலிலும் 5 மெகா பிக்ஸல் கேமராவும் மற்றும் விஜிஏ கேமராவும் கொடு்க்கப்பட்டுள்ளது. இதன் வைபை மூலம் நெட் வசதியினைப் பெற முடியும். புளூடூத் வசதி உள்ளதால் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். 1,500 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பேட்டரி நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. 3.5 மிமீ ஆடியோ ஜேக் வசதி கொண்டது. 122 கிராம் எடை கொண்டது. இதனால் கையாள்வது மிகவும் எளிதான காரியம்.


இந்த வேவ்-3 மொபைல் 4 இஞ்ச் சூப்பர் அமோல்டு டபிள்யூவிஜிஏ திரை கொண்டது. ஆக்ஸிலரோமீட்டர், பிராக்ஸிமிட்டி, லைட் சென்ஸார், எட்ஜ், ஜிபிஆர்எஸ், எச்எஸ்பிஏ காம்ப்பேட்டிபிலிட்டி, ஏ-ஜிபிஎஸ் போன்ற உயர்ந்த தொழில் நுட்பங்கள் கொண்டது. இந்த சாம்சங்வேவ்-3 ஸ்மார்ட்மொபைல் ரூ.19,600 விலையில் கிடைக்கிறது.


சாம்சங்கேலக்லி வை என்ற ஸ்மார்மொபைலும் இதனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது. அதோடு கூடுதல் வசதி கொண்ட பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.


கேலக்ஸி ஸ்மார்ட்போன் 3 இஞ்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. புளூடூத், யூஎஸ்பி 2.0 மற்றும் வைபை வசதியையும் பெற்றுள்ளது. இதில் 32 ஜிபி, ஏ-ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஜேக் வசதி உள்ளது. கேலக்ஸி மொபைல் 1,200 எம்ஏஎச் பேட்டரி கொண்டது.


இந்த மொபைல் மற்ற இரண்டு மொபைல்களையும்விட குறைந்த விலையில் ரூ.7,830 இந்திய சந்தையில் கிடைக்கிறது. மூன்று ஸ்மார்ட்மொபைல்களை சேர்த்துக் வெளியிடுவது என்பது மிகவும் சிறப்பான விஷயம். அந்த வகையில் சாம்சங்நிறுவனம் மூன்று ஸ்மார்ட்மொபைல்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்திருக்கிறது.

கூகுளின் மீண்டும் ஒரு சாதனை !

நாள்தோறும் சாதனைகள் பல புரியும் கூகுல் புதிதாக அதிரடி சாதனையை ஒன்றை புரிந்துள்ளது.

உலகிலேயே அதிவேக இணைய இணைப்பை உருவாக்கி வெற்றிகண்டுள்ளது. அதன் வேகம் வினாடிக்கு ஒரு கிகா பைட் (1 GB).
தரவிறக்க வேகம் 300 MB/s, பதிவேற்றல் வேகம் 125MB/s. தற்போது பலோ ஆல்டொ, கலிபோர்னியா,
ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழக வளாகம் என்பவற்றில் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
பரிசோதனையின் போது 95MB அளவுள்ள கோப்பை, வெறும் 9 செக்கன்களில் பதிவிறக்கி சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
வெகு விரைவில் கூகுல் தனது 'கூகுல் பைபர்' என பெயரிடப்பட்டுள்ள இக் கண்டுபிடிப்பை உலகமெங்கும் விரிவுபடுத்தவுள்ளது.

Steve jobs இன் வரலாறு மற்றும் சாதனைகள்!

உலகத்தலைவர்கள் பலர் இவரது மறைவிற்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஒபாமா " அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர் எனவும், வித்தியாசமாக யோசிக்கத் தைரியமுள்ளவர் எனவும், தன்னால் உலகை மாற்றமுடியும் என்பதை நம்புபவர் எனவும் அதை செய்து காட்டும் திறமையும் கொண்டவர் என தனது அஞ்சலி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் பல பிரபலங்கள் தங்களது அனுதாபத்தினை வெளியிட்டுள்ள இத்தருணத்தில் அவரின் வாழ்க்கைப்பயணங்களை மீட்டிப் பார்ப்பது சாலப்பொருந்துவதாக அமையும்.


ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்நாள் மற்றும் அப்பிள் நிறுவன வரலாற்றில் சில முக்கிய தருணங்கள்


1955: ஸ்டீவன் போல் ஜொப்ஸ் பெப்ரவரி 24 ஆம் திகதி பிறந்தார்.


1972: ஜொப்ஸ் போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் இணைந்தார் எனினும் முதல் செமஸ்டரிலேயே அதனை நிறுத்திவிட்டார்.


1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் I கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு வருகின்றது.


1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்படுகின்றது. த அப்பிள் II கணனி அறிமுகப்படுத்தப்படுகின்றது.


1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.


1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது பங்குகளை வெளியிட்டது (Initial public offering). 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொண்டது.


1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரிக்கின்றது.


1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.


1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.


1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும் வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகுகின்றனர்.


1986: ஜொப்ஸ் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழிநுட்பம் கொண்ட கணனிகளை பல்கலைக்கழகங்களுக்கென தயாரிக்கத்தொடங்குகின்றார்.


1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு செல்கின்றது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.


1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம் நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.


பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்துகின்றது.


ஜொப்ஸ் லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணக்கின்றார்.


1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவிக்கின்றது.


1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.


2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.


2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வருகின்றது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிடுகின்றது.


2004: கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.


2006: ஜொப்ஸ் டிஸ்னி நிறுவனத்தின் அதி கூடிய பங்குகளைக் கொண்ட தனிநபராகின்றார்.


2007: அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிடுகின்றது.


2009: ஜொப்ஸ் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.


2011 ஜனவரி 17: ஜொப்ஸ் 2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவிக்கின்றார்.


2011 ஓகஸ்ட் 24: ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கின்றார்.


2011 ஒக்டோபர் 5: ஜொப்ஸ் காலமானதாக அறிவிக்கப்படுகின்றது.


இதேவேளை உலகம் பூராகவும் மக்கள் பலர் தங்கள் அஞ்சலிகளை செலுத்திய வண்ணமுள்ளனர். 

 

கணனியில் சில சுவாரஸ்யங்கள்!

மேட்ரிக்ஸ் எப்படி இருக்கும் என பார்த்துருப்பீர்கள்.இதையே கனினியில் கொண்டு வரலாம்.
அதற்கான சுலபமான வழிகள் இதோ

1.Notepad ஐ அதாவது புதிய Text document திறந்து கொள்ளுங்கள்.


2.கீழே உள்ள கோட்களை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.


@echo off

color 02
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start

3.காப்பி செய்த கோட்களை அப்படியே உங்கள் NOTEPAD இல் பேஸ்ட் செய்யுங்கள்.


4.பிறகு எதாவது ஒரு பெயர் கொடுத்து (எடுத்துக்காட்டாக
Matrix effect.bat)என Save செய்யுங்கள்.

மிக முக்கியமாக .bat என்ற extension இல் save செய்ய வேண்டும்.அதற்கு All Files தேர்ந்தெடுத்து
matrix effect.bat என சேமியுங்கள்.

5.அவ்வளவுதான் double click செய்து இப்போது திறந்து பாருங்கள்

மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ்.....

மற்றுமொரு சுவாரஸ்யம்:-

1.உங்கள் கனினியில் Start பட்டனை அழுத்துங்கள்


2.ஆதில் தோன்றும் RUN ஐ க்ளிக் செய்யுங்கள்.

3.கீழே உள்ளவற்றை அப்படியே டைப் செய்யுங்கள் அல்லது இங்கிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
telnet towel.blinkenlights.nl

4.பிறகு ஒகே கொடுத்து
ஆட்டத்தை பாருங்கள்
ஆட்டம் ...களை கட்டும்
பயப்படாம பன்னுங்க மக்களே.!!!

சாம்சுங் அறிமுகப்படுத்தும் அசத்தலான கணனி!

மின்னனு தயாரிப்பில் எப்போதுமே சாம்சங் நிறுவனம் உச்சத்தில் இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களை திறமையாக திருப்திபடுத்தும் சக்தியை சாம்சங் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் அவற்றின் தரமான படைப்புகளும் அதன் நியாயமான விலையும் ஆகும்.

குறிப்பாக தற்போது சாம்சங் புதிதாக சீரிஸ் 1 ஆல் இன் ஒன் என்ற பெயரில் புதிய கம்ப்யூட்டரை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது. முதலில் அமெரிக்காவில் இதனை அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. பின்னர் மற்ற நாடுகளிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசி சாம்சங்கின் இணையற்ற படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசியின் டிசைனைப் பார்த்தால் அது அலுமினிய பேனலைக் கொண்டிருக்கிறது. இதன் கருப்பு திரை பார்ப்பதற்கு மிக பக்காவாக இருக்கிறது. இதன் 23 இன்ச் டிஸ்ப்ளே மிகவும் மெல்லியதாகும். இதன் ரிசலூசன் 1920X1080 ஆகும். மேலும் இது எல்எடி பேக்லிட் வசதியும் கொண்டிருக்கிறுது. மேலும் இதன் திரை தொடு வசதியும் கொண்டது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசி இண்டல் கோர் ஐ5 ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் செயல் திரன் மிக பக்காவாக இருக்கும். மேலும் இது 8ஜபி ரேம் கொண்டிருப்பதால் இதன் வேகமும் சீராக இருக்கும். இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் ஆகும். மேலும் ப்ளூடூத் மற்றும் வைபை வசதியும் இதில் சிறப்பாக உள்ளது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசி ஆப்டிக்கல் ட்ரைவ் மற்றும் 1டிடிபி ஹார்ட் ட்ரைவும் கொண்டுள்ளது. இது 4 வாட்ஸ் கொண்ட 2 ஹர்மான் ஸ்பீக்கர்களைக் கொண்டிருப்பதால் இதில் இசை கேட்பதும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். மேலும் இது யுஎஸ்பி 2.0 மற்றும் யுஎஸ்பி 3.0 போர்ட்டுகளையும் கொண்டுள்ளன.

அதுபோல் இதன் 1.3 மெகா பிக்சல் கேமரா தரமான படங்களையும் வழங்குகிறது. இந்த புதிய படைப்புக்கு 1 வருட உத்திரவாதமும் வழங்கப்படுகிறது. மேலும் இதில் சேண்டி பிரிட்ஜ் பவர் தொழில் நுட்பமும் உள்ளது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசியின் விலையைப் பார்த்தால் ரூ.40,000ஆகும். ஆனால் இதன் டாப் என்ட் மாடல் ரூ.49,000க்கு விற்கப்படும். இந்த புதிய டிவைஸ் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதிக்கு பின் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
The Samsung Series 7 all-in-one-PC is expected to be one of the most anticipated products from the Samsung till date. The Samsung Series 7 all-in-one-PC comes with a very thin display of 23-inch. The specification of the resolution is 1920*1080 which is pretty good. It comes with a state of the art LED backlit feature. The Samsung Series 7 all-in-one-PC also runs on a touch enabled screen technology. The processor used is the Intel Core i5processor which gives a better performance. It is comprised of the latest generation Intel integrated graphics technology. The RAM is about a whopping 8GB in the Samsung Series 7 all-in-one-PC. It also consists of four USB 2.0 as well as one USB 3.0 ports. Another remarkable feature that the Samsung series 7 all-in-one-PC has is the presence of 1.3 Mega pixel cameras which provides good picture quality. The price of the base model of the Samsung series 7 all-in-one-PC is around Rs. 40,000 where as the top end model comes with a price tag of 49,000 Indian Rupees. The product is expected to be available for the users by the 10th of October.

டெல் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஓர் லேப்டாப் கணணி!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட டெல் நிறுவனம் மின்னனு பொருள்களைத் தயாரித்து வழங்குவதில் உலக அளவில் நற்பெயரைப் பெற்று இருக்கிறது. மேலும் டெல் லேப்டாப் உலகில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறதென்றால் அது மிகையாகாது.

அந்த வரிசையில் டெல் புதிதாக டெல் எக்ஸ்பிஎஸ் 14இஸட் என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது. குறிப்பாக முதலில் இந்த புதிய லேப்டாப்பை சீனாவிலும் அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்த இருக்கிறது.


இந்த புதிய லேப்டாப்பின் சிறப்பம்சங்களைப் பார்த்தோமானால் இது அலுமினிய உலேகத்தால் ஆனது. அதனால் இது பக்கா ஸ்டைலாக இருக்கும். இதன் அடர்ந்தி 1 இன்ச்சிக்கும் குறைவாக இருப்பாதால் இது மெல்லியதாகவும் போர்ட்டபுளாகவும் இருக்கும்.


அடுத்ததாக இதன் டிஸ்ப்ளே 14 இன்ச் அளவு கொண்ட எல்எடி வசதி கொண்டதாகும். இதன் பிக்ஸல் ரிசலூசன் 1366X768 ஆகும். அதனால் இதன் டிஸ்ப்ளே தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும். மேலும் இது ஆப்பிளின் லேப்டாப்புகளுக்கு சரியான போட்டியாக இருக்கும் என நம்பலாம். இது இன்டல் கோர் ஐ5 ப்ராசஸரைக் கொண்டு இருப்பதால் இதன் கம்ப்யூட்டிங் மிக விரைவாக இருக்கும். மேலும் இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் ஆகும்.


டெல் எக்ஸ்பிஎஸ் 14ஸட் 8ஜிபி ரேமையும் அதேபோல் 500ஜிபி எச்டிடியையும் கொண்டிருக்கிறது. அதுபோல் மற்ற லேப்டாப்புகளில் இல்லாத நவீன ஆப்டிக்கல் ட்ரைவையும் இது வழங்குகிறது. மேலும் இதன் ட்ராக்பேட் மிக பெரியது. அதன் நிறம் மெட்டலிக் ஆகும்.


அடுத்ததாக ப்ளூடூத் மற்றும் வைபை கொண்டிருக்கிறது. 1ஜிபி வீடியோ கார்ட் கொண்டிருப்பதால் தடையில்லாமல் வீடியோ படங்களைப் பார்க்க முடியும். இதன் பேட்டரியின் திறனை எடுத்துக் கொண்டால் இது 7 மணி நேரம் தாங்கக் கூடியதாகும். மேலும் இந்த லேப்டாப் கார்ட் ரீடர் மற்றும் மல்டி டச் பேட் கொண்டு ஒரு யூசர் ப்ரண்ட்லியாக இருக்கிறது. மேலும் இது யுஎஸ்பி 3.0 போர்ட்கள் மற்றும் லேன் கனக்சனும் கொண்டிருக்கிறது.


டெல் எக்ஸ்பிஎஸ் 14ஸட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ரூ.38,000 முதல் ரூ.41,000க்குள் இருக்கும் என நம்பலாம். மேலும் இந்த லேப்டாப் டெல்லுக்கு மிக பெரிய வெற்றியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். டெல்லின் நோக்கம் மிக மெல்லிய லேப்டாப்பை இந்த உலகிற்கு வழங்குவதாகும்.

English summary
The latest news is that Dell is going to release an ultra thin laptop named Dell XPS 14Z capable of providing a considerably good performance. The surprise in this announcement is that they are going to unveil the Dell XPS 14Z laptop only in China first as part of their renewed strategy of foreseeing the rise of China as an economic super power. After its release in China, it will be released in the United States of America and then around the world. Dell XPS 14Z includes aluminium coated body frame which is stylish in design. The thickness of the new Dell XPS 14Z model is less than an inch which makes it extremely slim and portable. Dell XPS 14Z is the presence of 8GB of RAM as well as 500 GB of HDD. One of the latest and not before seen feature that the dell has included in this laptop is the presence of an “optical drive”. The price of this ultra thin Dell 14Z laptop has not been announced yet. But as per the sources, it will be somewhere around 38000 Rs to 41000 Rs.
 

கூகுளிடம் ஓர் விளையாட்டு

கூகிள் நமக்கு அளிக்கும் வசதிகள் அனைத்தையும் பெறுவதற்கு நமக்கு அவசியம் தேவை ஒரு ஜிமெயில் என்பதை அறிவோம்.
தற்போது ஜிமெயில் பதிவுசெய்யும்போது மொபைல் எண் வெரிஃபிகேசன் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
 நம் மொபைல் எண்ணை வைத்து நம் ஜாதகத்தையே கூகிள் கணித்து விடும்(தேவைப்படும் பட்சத்தில்) .அதேசமயம் மொபைல் வெரிஃபிகெசன் செய்வது மிகவும் பாதுகாப்பானது. நம் கணக்கை யாராவது களவாடிவிட்டால் நமக்கு மிகவும் பயணளிக்கும் என்பதையும் அறிவோம்.


ஆனாலும் நமது பிரைவேசியில் கூகிள் தலையிடுவது பலருக்கும் பிடிக்காது.அதோடு சிலருக்கு மண உளைச்சலும் இருக்கலாம்.

வெகு சிலரிடம் மொபைல் எண் இல்லாமல் கூட இருக்கலாம்.இப்படிப்பட்ட சூழலில் மொபைல் எண் வெரிஃபிகேசனை எப்படி ஏமாற்றுவது என்று பார்ப்போம்.

1.தற்போது ஏராளமான வலைத்தலங்கள் இணையத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பவும்,வாய்ஸ் மெயில் அனுப்பவும் கூடவே ஒரு மொபைல் எண்ணும் கொடுக்கின்றன.


அப்படிப்பட்ட சில தலங்கள்

http://receive-sms-online.com/
http://k7.net/

k7.net  சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என்று நினைக்கிறேன்.


மேலே உள்ள தளங்கள் அல்லது இதுபோல் சேவையளிக்கும் உங்களுக்கு தெரிந்த தளங்களுக்கு செல்லுங்கள்.


2.பதிவு செய்ய வேண்டி இருந்தால் பதிவு செய்து ஒரு எண்ணை பெற்றுக்கொள்ளுங்கள்.


3.பிறகு ஜிமெயில் உருவாக்குங்கள்.அதில் மேலே உள்ள தளங்கள் கொடுத்த எண்ணை வெரிஃபிகேசனுக்காக கொடுங்கள்.


4.மீண்டும் நீங்கள் மொபைல் எண் பெற்ற தளத்திற்கு சென்று பாருங்கள்.கூகிள் வெரிஃபிகேசன் கோட்கள் இருக்கும்.அதை அப்படியே ஜிமெயில் வெரிஃபிகேசனுக்காக கொடுத்து ஜிமெயிலையும் கூகிளையும் ஏமாற்றுங்கள்.


தெரிந்துகொள்வதற்காக மட்டுமே இந்த பதிவு போடப்பட்டுள்ளது.மற்றபடி உங்கள் உண்மையான மொபைல் எண்ணை கொடுத்து ஜிமெயிலில் பதிவு செய்வதே பிற்காலத்திலும் பயன்படக்கூடியதாக இருக்கும். என்னுடைய பரிந்துரையும் அதுவே.!!!

 நன்றி மீண்டும் சந்திப்போம்.

கணினியின் வேகத்தை அதிகரிக்க...

RAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி.
பொதுவாக 512 எம்பி,1ஜிபி என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் 2ஜிபி உள்ளது. .

RAM என்பது ஒவ்வொரு முறையும் தகவலை பெற கணிணி Hard Disk சென்றால் நேரம் ஆகும். RAM மூலம் குறிப்பிட்ட அளவு தகவல்களை Hard disk செல்லாமல் RAM இல் இருந்து எடுத்துக்கொள்கிறது எனவே தான் RAM கூடுதலாக ஒன்று வாங்கி கணிணியில் இணைத்திருப்பார்கள் ..வேகத்தை அதிகரிக்க..


இங்கே RAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகளை காணலாம்.


XP இல் முதலில்
My Computer சென்று == properties ==system properties தேர்வு செய்யுங்கள் விஸ்டா இல் Control panel == Properties பின் Performance Option கிளிக் செய்து Advance system setting சென்று setting தேர்வுசெய்து Performance Option சென்று Advanced தேர்வுசெய்யுங்கள் .


Virtual memory சென்று change கிளிக் செய்யுங்கள் பிறகு Automatically manage paging file size for all drives எனும் checkbox தேர்வுசெய்து பிறகு படத்தில் உள்ளவாறு உங்களுக்கு தேவையான space எந்த disk இல் உள்ளதோ உதாரணமாக c அல்லது D என தேர்வுசெய்யுங்கள் .


C drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் . .

custom managed size என்பதை தேர்வு செய்து Initial Size" மற்றும் "Maximum Size" ஆகியவற்றை MB அளவுகளில் கொடுத்து click on "Set" அவ்வளவுதான் .. உங்கள் virtual memory அதிகரித்துவிட்டது.

மறந்ததை நினைவுபடுத்தும் இணையதளம் !

செய்ய நினைத்ததை மறந்துவிடாமல் இருக்க உதவும் இணையசேவைகளின் வரிசையில் ரிமின்டர் தளத்தையும் சேர்த்து கொள்ள‌லாம்.பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதில் துவங்கி அடுத்த வாரம் தொலைபேசி கட்டணம் கட்ட வேண்டும் என்பது வரை செய்ய வேண்டியவை எதுவாக இருந்தாலும் இந்த தளத்தின் மூலம் நமக்கு நாமே நினைவூட்டி கொள்ளலாம்.
இந்த தள‌த்தை பயன்படுத்துவது சிக்கலே இல்லாமல் எளிமையானது. எதை எப்போது எந்த நேரத்தில் நினைவுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் போதும். அதை அப்போது அந்த நேரத்தில் சரியாக நினைவுப்படுத்தி விடுகிறது.அதாவது எந்த விஷயத்தை நினைவூட்ட வேண்டும் என்ற விவர‌த்தை அதற்குறிய கட்டத்தில் தெரிவித்துவிட்டு அதற்கான நாள் மற்றும் நேரத்தை குறிப்பிட்டால் போதும்.
 
உதாரணத்திற்கு மனைவியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று தெரிவித்து அந்த தகவலை நினைவூட்டுவதற்கான நாளையும் நேரத்தையும் குறிப்பிடலாம். டிவிட்டர் மூலமோ அல்லது இமெயில் மூலமே நினைவூட்டல் செய்தியை பெறலாம்.
 
செல்போனில் கூட நினைவூட்டல் வசதி இருக்கிறது. அத்தனை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் இணையம் மற்றும் டிவிட்டர் போன்றவற்றை பலரும் பயன்படுத்துவதால் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
 


ஈமெயில் ஸ்பாம் பாதுகாப்பு !

ஸ்பேம் எனப்படுவது சம்மந்தமில்லாத/ஆபத்தான வர்த்தக பின்புலம் கொண்ட தகவல்கள் நமது இணைய பெட்டகத்தில் வந்து குவிவதாகும். ஸ்பேம் அஞ்சல் தொடங்கி, ஸ்பேம் மெசேஜ், ஸ்பேம் கமெண்ட், ஸ்பேம் லிங்க்,என பல வடிவங்களில் வந்துவிட்ட இவை ஸ்பேம் டிவிட்களாகவும் படையெடுக்கிறது. சிலசமயம் நமக்கு வரும் ஸ்பேம்களைவிட நம்மால் மற்றவருக்கு செல்லும் ஸ்பேம்கள் கர்ண கொடூரமானவை.
முக்கியமாக டிவிட்டரில் நடப்பவையை இரண்டு வகையாக்கலாம், நம் கண்ணெதிரே அனுமதிவாங்கி ஸ்பேம்கள் அனுப்புபவை,மற்றொன்று தமக்குத் தெரியாமல் அனுமதிவாங்கி ஸ்பேம்கள் அனுப்புபவை. சில தளங்களில் login செய்ய டிவிட்டர் கணக்கை கேட்கும், நாமும் சரி என்று அனுமதி அளித்து பயன்படுத்திவிட்டு வருவோம். இரண்டாவது தெரியாத ஒருதளத்திற்குள் நுழையும் போது டிவிட்டர் கணக்கை கேட்பவை பெரும்பாலும், சுருக்கப்பட்ட முகவரியாகவும், DM மெசேஜ்களாகவும் இருக்கும். அங்கே நாம் கவனிக்க மறப்பவை 'access and update' என்கிற வசதி. இது வேறொன்றுமில்லை, அந்த தளத்திற்கு நீங்க update செய்யும் உரிமையை வழங்குகிறீர்கள். பிரபல தளங்களாக இருந்தால் பிரச்சனையில்லை டுபாக்கூர் என்றால் ஸ்பேம்கள் ராஜ்ஜியம்தான். கணக்கின் settings->applications சென்று கவனித்தால் இதுவரை யாருக்கெல்லாம் கணக்கை வாடகைக்கு விட்டுள்ளீர்கள் எனத் தெரியும். read only accessக்கு பிரச்சனையில்லை read and write access - read,write and direct message access என்றால் கவனமாக இருக்கவும் தேவையில்லை எனத் தெரிந்தால் revoke access பட்டனைத் தட்டி விரட்டிவிடுங்கள். தேவையில்லாத DMகளை சொடுக்காமல் தவிர்க்கவும்.


மிழ் வாக்கியங்களை படிக்கும் தானியங்கிகள் உண்டா என்ற தேடலுக்கு ஒரு விருந்து கிடைத்துள்ளது. இங்கு தமிழ் வாக்கியங்களை ஒலி வடிவில் மாற்றிக் கொடுக்கிறது. இயல்பான ஒலியை எதிர்பார்க்க முடியாவிட்டாலும் ஏமாற்றாமல் பேசிகிறது.
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/

ணையத்திற்குள்ளும் ஒழுங்குகள் பின்பற்ற வேண்டும் என்று தெரியும் ஆனால் அவற்றை பழக்க போக்கில் மீறமுற்படுவோம். "இணைய வாக்கு போரில் சமாதானகோடியே வெற்றிகொடி"; "குழந்தைகளோடு இணையத்தில் உலாவுங்கள்;, "மறப்போம் மன்னிப்போம் என்பது இணையத்தில் இல்லவே இல்லை", "சமூக தளங்களுக்குள் நுழைவதற்கு முன் அதன் அடிப்படை அறிவைதேடிக்கொள்" என வாழைபழத்தில் ஊசிஏற்றி சொல்கிறது. கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டிய etiquette
http://eetiquette.com

P
DF கோப்புகளை பிரிக்க மற்றும் இணைக்க ஒரு நல்ல தளம் sciweavers அது மட்டுமல்லாது, படங்களிலிருந்து மொழியை பிரித்து[image to text] தரும் வசதியும் இதுவரை தெரியாத அறியாத யுனிக்கோட் குறியீடுகளை சாட்டிங், டிவிட்டிங்க்கும் தருகிறது.
http://www.sciweavers.org



அறிமுகம் ஆகப்போகும் 250CC ஸ்போர்ட்ஸ் பைக்

ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சத்தில் புதிய 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்ய கார்வேர் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற கொரியாவை சேர்ந்த கார்வேர் மோட்டார்ஸ் நிறுவனம், புனேவை சேர்ந்த எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்தது.

ஹயோசங் பிராண்டில் 650சிசி திறன் கொண்ட ஜிடி650ஆர் சூப்பர் பைக்கையும், 700சிசி திறன் கொண்ட எஸ்டி-7 என்ற குரூஸர் பைக்கையும் இந்தியாவில் தற்போது கார்வேர் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், பைக் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், சர்வீஸ் நெட்வொர்க்கை வலுப்படுத்தும் விதத்திலும் புதிய டீலர்களை கார்வேர் நிறுவனம் திறந்து வருகிறது.

இந்த நிலையில், 250சிசி திறன் கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை கார்வேர் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்வேர் நிறுவனம் தற்போது ரூ.4.75 லட்சம் முதல் ரூ.4.90 லட்சம் வரையில் ஜிடிஆர்650ஆர் சூப்பர் பைக்கையும், ரூ.5.69 லட்சம் விலையில் எஸ்டி-7 குரூஸர் பைக்கையும் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் விலையில் புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கார்வேர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Korean Super bike maker Garware motors planning to launch new 250cc sports bike in India. The company currently sales the hyosung gt650r and st7 cruiser bikes in India. The new sports bike will come Rs.2 lakh price tag in India.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பாருங்கள் பேப்பர் பற்றரிகள்

சில காலங்களாக உலகம் அழிவுப் பாதையில் போய்க்கொண்டு இருந்தாலும் இப்பொழுது உலகம் சற்று திசை மாறி முன்னேற பாதைக்கு செல்வதாகத் தான் தோன்றுகிறது.பற்றரி பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். மின்சாரத்தை தேக்கி வைத்து தேவையான நேரங்களில் பயன்படுத்தும் வகையில் அமைந்து இருக்கும்.இந்த பற்றரி பொதுவாக ஜின்க், மக்னீசியம், மெர்குரி போன்ற வேதிப் பொருட்களால் தான் இது உருவாகப்படுகின்றது. இது போன்ற பற்றரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்பு அடைகின்றது.

 இதை தடுக்கும் விதமாக சமீபத்தில் பேப்பர் பற்றரிகள் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இதுவரை உலோகத்தை பயன்படுத்தாமல் பற்றரியை உருவாக்க முடியாது என்கிற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது முழுக்க முழுக்க பேப்பர் பற்றரியை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

 
இதனை ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு.மரியா ஸ்ட்ரோம் தான் கண்டுபிடித்து இருக்கின்றார்.மேலும் இந்த பற்றரி சுற்றுச்சூழலுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பானவை. இது வெறும் சுற்றுசூழலுக்கு தானா என்று கவலைப்படவேண்டாம்.
இந்த பற்றரியை மிகச் சுலபமாக உருவாக்கி விடலாம். ஏன் என்று சொன்னால் இது ஒரு கடல் வாழ் உயிரினமான க்ளாடோபோரா என்கிற ஒரு கடல் வாழ் அல்கேவினால் தான் இது உருவக்கப்பட்டு இருந்தது. மேலும் இது கடலில் உருவாவதால் விலையும் மிக மலிவானதாக தான் இருக்கும்.
இது பாலிமர் பற்றரி என்கிற வகையை சார்ந்ததாக இருக்கின்றது. ஆனால் இதுவரை இருக்கின்ற பற்றரிகளை விட இது 200 மடங்கு அதிக மின்சாரத்தை தேக்கி வைத்து கொள்ளக் கூடிய சக்தி இதற்கு இருக்கின்றது.இதில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. இதை மிகச் சுலபமாகவே சார்ஜ் செய்து விடலாம்.
 இப்பொழுது பயன்பாட்டில் இருக்கின்ற லிதியம் பற்றரிகளை விட வேகமாக சார்ஜ் ஆகக் கூடிய தன்மை படைத்ததாக இருக்கின்றது.தற்பொழுது தொடக்க நிலையில் இருக்கும் இதனுடைய பயன்பாடுகள் கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று இதனை உருவாக்கியவர் கூறுகின்றார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய இலவசமான அண்டி வைரஸ் !

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆபரடிங் சிஸ்டம் உடன் இலவச antivirus இணைப்பை தற்போது நிறைவேற்றி உள்ளது .

இந்த புதிய antivirus விண்டோஸ் 7 இணைப்புடன் இலவசமாக இணைக்கப்படுகிறது .மேலும் விஸ்டா , XP போன்றவற்றிலும் இதை இணைத்துக்கொள்ளலாம் .

இந்த antivirus மென்பொருளுக்கு "Morro" என பெயர் சூட்டப்பட்டுள்ளது . இதன் முதல் சோதனை பதிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .
மைக்ரோசாப்ட் நிறுவனமே நேரடியாக antivirus தயாரிப்பில் இறங்கியுள்ளதால் மற்ற antivirus நிறுவனங்களுக்கு இது பேரிடியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை .