இணையத்தில் வீடியோ கோப்புகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய !

வீடியோ கோப்புகளை பதிவிறக்கம் செய்ய எத்தனையோ மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

1 எம்.பிக்கும் குறைவான இந்த மென்பொருளினை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். 

இதில் மேல்புறம் உங்களுக்கு On-Off என சின்ன விண்டோ இருக்கும். அதை கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் எங்கு பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ அந்த தேவையான இடத்தை செட் செய்துகொள்ளலாம்.
 
நீங்கள் பதிவிறக்கம் செய்யும் கோப்பு எந்த வகையில் பதிவிறக்கம் ஆக வேண்டுமோ அதனையும் நீங்கள் செட் செய்து கொள்ளலாம்.
 
நீங்கள் பார்க்கும் வீடியோவின் இணையதள முகவரியை URL கொப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தால் போதுமானது. பதிவிறக்கம் ஆகிவிடும்.
 
ஆபாச இணையதள முகவரிகளையும் இதில் பதிவிறக்க முடியாமல் தடைசெய்யலாம் என்பது இதில் கூடுதல் வசதியாகும்.
 

எச்டிசி அறிமுகப்படுத்தும் புதிய அசத்தலான மொபைல் போன் !

மொபைல் உலகின் நட்சத்திர நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் எச்டிசி நிறுவனம் தற்போது ஹீரோ அம்சங்கள் பொருந்திய புதிய மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆம், இதற்காகவே இந்த மொபைலின் பெயரையும் ஹீரோ என்று வைத்துள்ளது எச்டிசி. எச்டிசி ஹீரோ எஸ் என்ற குறியீட்டு பெயரில் வந்துள்ள இந்த புதிய மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

இந்த இயங்குதளம் எளிதாக இயங்குவதற்கு 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணை புரிகிறது. 4 இஞ்ச் திரை கொண்ட இந்த மொபைல் கியூஎச்டி எஸ்-எல்சிடி கெப்பாசிட்டிவ் டச் திரை தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது.

5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் கொண்டிருக்கிறது. இது 1280 X 720 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். இந்த மொபைலில் 720பி வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற முடியும்.

ஹீரோ எஸ் மொபைலில் 3.0 வெர்ஷன் புளூடூத் உள்ளது. அனைத்து வசதிகளை அள்ளித் தர இருக்கும் இந்த மொபைல் 130 கிராம் எடையை கொண்டு ஜொலிக்கிறது.

இந்த மொபைலில் உள்ள வைபை தொழில் நுட்பத்தின் மூலம் நெட் வசதியினை எளிதாக பெறலாம். இதில் 1,520 எம்ஏஎச் லத்தியம் அயான் பேட்டரி உள்ளதால் 7.25 மணி நேரம் டாக் டைமும் மற்றும் 456 மணிநேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கிறது.

இந்த ஹீரோ மொபைலின் விலை பட்டியல் விவரம் பற்றி தகவல்கள் கூறவில்லை.

உங்கள் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு!

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
 
குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.
 
இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.
 

பேஸ்புக் பயனாளர்களுக்கு புதியதோர் எச்சரிக்கை !

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆபாச படங்கள் மூலம் புதிய வகை ஹேக்கிங் நடவடிக்கையொன்று வேகமாக பயனாளர்களின் பக்கங்களை தாக்கி வருவதாக முறைப்பாடு எழுந்துள்ளது.பேஸ்புக்கின் Newsfeeds இன் ஊடாக அனுப்பப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் செய்தி ஒன்றை கிளிக் செய்வதன் மூலம் தனிநபர் பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்படுகின்றன.

பெங்களூரில் 2 இலட்சம் பேஸ்புக்பாவணையாளர்களது புரொபைல் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக Mid Day செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
ஹேக்கிங் செய்யப்பட்ட புரொபைல் பக்கங்களிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள், ஃமார்பிங் மூலம் ஆபாச புகைப்படங்களாக மாற்றப்பட்டு(Pornographic) அவர்களது நண்பர்களது மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பப்படுகிறது.
 
இது தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக தொலைபேசி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் தொடர்பான அரச பிரிவு பேஸ்புக் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது.
 
இது ஒரு ஸ்பாம் நடவடிக்கை எனவும், இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக முயன்றுவருவதாகவும், ஸ்பாம் நடவடிக்கைகளிலிருந்து பாவணையாளர்களை காப்பதே எமது முதன்மையான செயற்பாடு எனவும் பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
சில போலியான Malware மற்றும் சில ஜாவா ஸ்கிரிப்டினால் அனுப்பப்படும் செய்திகளை நம்பி ஏமாறும் பயனாளர்கள் தமது உலாவிகளில் அவற்றை பதிவிறக்கம் செய்துவிடுவதன் விளைவாக, இந்த தாக்குதல் உள்ளடக்கம் விரைவாக பகிரப்படுகிறது என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை இந்த பிரச்சினை இந்தியாவில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியில் பேஸ்புக்கிற்கு சிக்கலை கொடுத்துள்ளது. பெருமளவான ஸ்பாம்கள் இந்த ஆபாச படங்கள் ஊடாக பேஸ்புக் பயனாளர்களின் புரொபைல்களை தாக்க தொடங்கியுள்ளன.
 
இதனை தடுக்க தனது நிர்வாக கட்டமைப்பில் புதிய பாதுகாப்பு விடயங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாகவும் பேஸ்புக் சுட்டிக்காட்டியுள்ளது.
 
உலகெங்கிலும் இருந்து சுமார் 800 மில்லியன் பயனாளர்கள், பேஸ்புக்கில் பதியப்படும் இந்த ஆபாசபடங்கள் தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
 
இதுவொரு இனந்தெரியாத நபரின் ஹேக்கிங் நடவடிக்கையாக நிச்சயம் இருக்காது எனவும், யார் அந்த சந்தேக நபர் என்பது பேஸ்புக் நிர்வாகத்திற்கும் தெரிந்திருக்கலாம் எனவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.
 
பயனாளர்களது பேஸ்புக் பக்கத்தில் இந்த புதிய ஹேக்கிங் தாக்குதல் நடைபெறாமல் இருப்பதற்காக சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பேஸ்புக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
 
இனந்தெரியாத கோட்களை, பேஸ்புக்கின் Address Bar இல் ஒரு போதும் Copy, Paste செய்யாதீர்கள். எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட உலாவியை பயன்படுத்துங்கள்.
 
ஏதும் வித்தியாசமான, அசாதாரண நடவடிக்கைகள் ஏதும் உங்களது பேஸ்புக் பக்கத்திலோ அல்லது நண்பர்களின் பக்கத்திலோ தோன்றினால் உடனடியாக Flag பட்டன் மூலம் பேஸ்புக்கின் Report Links ற்கு தெரியப்படுத்துங்கள்.

புதிய வழிமூலம் பேஸ்புக்கை உவயோகிக்க !

வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் எல்லாமே சுலபமாகி விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர்.அதில் ஒரு முக்கியமான வசதியாக கணணி இல்லாமல் இணைய இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கலாம்.

இதற்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும்

மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி:
 
முதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
 
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobile என்பதை கிளிக் செய்யுங்கள்.
 
பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
 
முதலில் நீங்கள் வசிக்கும் நாட்டினை தேர்வு செய்து கொண்டு அடுத்து கீழே உள்ளதி உங்கள் மொபைலின் Service Provider தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 
ஒருவேளை உங்களுடைய Service Provider அந்த பட்டியலில் இல்லை என்றால் Other Carrier என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 
Next பட்டனை அழுத்தவும். இன்னொரு விண்டோ திறக்கும்.
 
இப்பொழுது உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து அங்கு கொடுத்திருக்கும் எண்ணுக்கு SMS அனுப்புங்கள். (ஒவ்வொரு நாட்டிற்கும் மொபைல் எண் வேறுபடும்)
 
நீங்கள் SMS அனுப்பிய உடனே உங்களுக்கு ஒரு பதில் SMS வரும் அதில் உள்ள Confirmation code குறித்து கொண்டு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் கொடுக்கும் மற்றும் உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றால் Share my mobile number with my friends என்பதில் உள்ள டிக் மார்க் நீக்கி விட்டு Next பட்டனை அழுத்தவும்.
 
அவ்வளவு தான் உங்களின் மொபைல் எண் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு விடும். மற்றும் அதில் உள்ள settings உங்களுக்கு தேவையான படி மாற்றி வைத்து கொள்ளுங்கள்.
 
இனி நீங்கள் பதிவு செய்யப்பட மொபைல் SMS வழியே பேஸ்புக்கை உபயோகிக்கலாம்.
 
SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கும் முறை:
 
மொபைல் SMS மூலம் உபயோகிக்க கீழே உள்ள முறைகளை பயன்படுத்தவும். பேஸ்புக் சுவரில் எழுத சாதரணமாக SMS டைப் பண்ணி முன்பு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினால் போதும் சுவரில் அப்டேட் ஆகிவிடும்.
 
புதிய நண்பரை சேர்க்க - add your friend name.
Subcribe செய்ய - Subscribe your friend name.

வேகமான இணையம் வேண்டுமா?

இணையத்தின் வேகத்தை அதிரிக்க நிறைய வழிமுறைகள் நம் கணணியிலேயே இருக்கின்றது. இருந்தாலும் நாம் சில எளிய வழிமுறைகளை செய்வதன் மூலம் இணைய வேகத்தை அதிகரிக்கலாம்.
 நீங்கள் பயன்படுத்தும் உலாவி பயர்பொக்ஸ் என்றால்,

1. முதலில் பயர்பொக்ஸை திறக்கவும். அதன் address bar இல் about:config என்று டைப் செய்து enter பட்டனை தட்டவும்.
 
2. network.http.pipelining என்றிருப்பதை double கிளிக் செய்து True என்று செட் பண்ணவும்.
 
3. network.http.pipelining.maxrequests என்றிருப்பதை double கிளிக் செய்து 4 என்றிருப்பதை 10 என்று மாற்றவும். 
 
4. இறுதியாக வலது கிளிக் செய்து create new –>integer தேர்ந்தெடுக்கவும். பின்பு “nglayout.initialpaint.delay” என்று டைப் செய்து அதன் மதிப்பு தொகுப்பு “0″ என்று செட் பண்ணவும். (இதுவே பெறும் தகவல்களை செயல்படுத்தும் முன் உலாவி காத்திருக்கும் நேர அளவு)
 
நீங்கள் பயன்படுத்தும் உலாவி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்றால்,
 
1. Start –> Run கிளிக் செய்து. regedit என்று டைப் செய்யவும்.
 
2. HKEY_CURRENT_USER –> Software –> Microsoft –> Windows –> Current Version –> Internet Settings ஐ தேர்ந்தேடுக்கவும்.
 
3. Default value இல் இருந்து 10 என்று அதிகரிக்கவும்.

மொழி கத்துக்கொடுக்கும் ஓர் அசத்தலான இணையதளம் !

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது. 
ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை. அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து. அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து.
புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது. இத்தகைய சிறந்த வழியை தான் பாலிஸ்பீக்ஸ் தளம் உண்டாக்கி தந்துள்ளது.
 
இந்த தளத்தில் உறுப்பினரானவுடன் எந்த மொழியில் பேச வேண்டும் என்று கேட்பது போல பல்வேறு மொழி பேசுபவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிற‌து. பயனாளிகள் தாங்கள் கற்க விரும்பும் மொழி பேசுபவரோடு இணையத்தில் உரையாட துவங்கி விடலாம்.
 
உதாரனத்திற்கு ஜப்பானிய மொழி கற்று கொள்பவர்கள் இந்த தளம் மூலம் ஜப்பானியரோடு அரட்டை அடித்து அந்த மொழியில் உள்ள பேச்சு நுணுக்கங்களை தெரிந்து கொள்ள‌‌ முற்படலாம். 
இதே போலவே வேற்று மொழி பேசுபவர்களோடு வீடியோ வழியே உரையாடும் வசதியை வெர்ப்லிங் தளம் தருகிறது.
 
ஆனால் பாலிஸ்பீக்ஸ் வீடியோ வசதி இல்லாமல் சாட் செய்வது போலவே இணைய உரையாடலில் ஈடுபட வைக்கிறது.புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ளும் நிலையில் பேசுவதை விட எழுத்து மூலம் உரையாடுவதே உகந்த‌தாக இருக்கும் என்று நினைத்து இந்த அரட்டை வசதியை தருவதாக பாலிஸ்பீகஸ் தளம் தெரிவிக்கிற‌து.
 
பேஸ்புக் கணக்கை கொண்டே இதில் உறுப்பினராகி வேற்று மொழி பேசுபவருடன் அரட்டையில் ஈடுபட்டு மொழியை வளர்த்து கொள்ளலாம்,நட்பையும் வளர்த்து கொள்ளலாம். ஒரு காலத்தில் சாட் என்று சொல்லப்படும் அரட்டை தளங்கள் இணையத்தில் கொடி கட்டி பறந்தன.அதன் பிறகு அரட்டை தளங்களின் செல்வாக்கு தேய்ந்து போய்விட்டன.
 
அதன் பிறகு சாட்ரவுலட் தளம் மீண்டும் அர‌ட்டை தளங்களுக்கு புதிய மவுசை தேடித்தந்தது. இந்த நிலையில் அரட்டையை மொழி கற்பது உள்ளிட்ட பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை பாலிஸ்பீக்ஸ் போன்ற தளங்கள் ஏற்படுத்தி தருகின்ற‌ன.
 

கூகுள் டாக்ஸ் இன் பயன்படும் சிறப்பம்சங்களும் !

மைக்ரோசாப்ட் ஆபீஸ் தரும் வசதிகளையே பயன்படுத்துபவர்கள் அவ்வளவாக Google Docs பயன்படுத்துவது இல்லை
படங்களைப் பார்க்க, டெக்ஸ்ட் கோப்புகளை இயக்க என எந்தத் தேவை என்றாலும் அதனை மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற்ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர்.
 
ஆனால் கூகுள் தன்னுடைய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதிகள் அனைத்தையும் தருகிறது. இணையதளங்களைப் பார்க்கையில் அல்லது ஜிமெயில் தளத்தில் எந்த ஒரு கோப்புக்கான லிங்க்கில் கிளிக் செய்தாலும் உடனே கூகுள் டாக்ஸ் செயல்படுத்தப்பட்டு நாம் தேடும் கோப்பு காட்டப்படும்.
 
ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்? என நமக்குள் கேள்வி எழலாம். மேலோட்டமாகப் பார்க்கையில் சில காரணங்களுக்காக இதனைப் பயன்படுத்தலாம் என்று தெரியவரும். அவை:
 
1. இலவசம்: கூகுள் டாக்ஸ் முற்றிலும் இலவசம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல பணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. கூகுள் டாக்ஸ் அடிப்படையில் ஒரு வெப் பிரவுசர் போலச் செயல்படுகிறது. இதனை உங்கள் கணணியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை. அனைத்து எடிட்டிங் வேலைகளையும் மேற்கொள்ளலாம்.
 
2. இணைய வெளியில் இயக்கம்: Google Docs இணையத்தில் கிடைக்கும் ஒரு புரோகிராம். கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் இயங்குகிறது. இதனால் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும் எந்த இடத்திலும் உங்கள் கோப்புகளை ஏற்கனவே அதனை உருவாக்கி இருந்தாலும் எளிதாகப் பெற்று எடிட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கூகுள் கணக்கு மட்டும் தான்.
 
பெர்சனல் கணணி வழியாக மட்டுமின்றி கைபேசி, நெட்புக், டேப்ளட் பிசி என எதன் வழியாகவும் இதனை இயக்கலாம். இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் 1024 எம்.பி இடம், இணைய வெளியில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கிடைக்கிறது.
 
3. பகிர்ந்து கொள்ளல்: கணணி பயன்படுத்தும் அனைவரும் சமுதாய இணையதளங்கள் தரும் வசதியை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
 
ஏனென்றால் இதன் மூலம் நாம் நம் தகவல்களை, கோப்புகளை, உருவாக்கங்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கூகுள் டாக்ஸ் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதால் இதுவும் சாத்தியமாகிறது. நீங்கள் உருவாக்கும் கோப்புகளை Public or Private என வகை பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
 
4. பயன்படுத்த எளிது: மைக்ரோசாப்ட் ஒவ்வொரு முறை தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் Ms Office புரோகிராம்களைப் புதியதாகக் கொண்டு வருகையில் புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பழக நமக்குச் சில நாட்களாகின்றன.
 
அதுவரை பழைய முறையே நன்றாக இருந்தது என்று சலிப்பாகக் கூறுகிறோம். கூகுள் டாக்ஸ் அவ்வாறு இல்லாமல் பழக எளிமையாக உள்ளது. மைக்ரோசாப்ட் தொகுப்பிலிருந்து கூகுள் டாக்ஸ் மாறுவோருக்கும் எளிதாக உள்ளது.
 
5. இணைவமைவு: எந்த ஓபரேட்டிங் சிஸ்டத்தில் ஒரு கோப்பை உருவாக்கினாலும், எந்த போர்மட்டில் அதனை அமைத்திருந்தாலும், கூகுள் டாக்ஸ் மூலம் அதனைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ற முறையில் இயக்கும் திறனை கூகுள் டாக்ஸ் பெற்றுள்ளது.