விஜய் துரோகியா? - ஒரு ரசிகனின் குமுறல்!

விஜய் ராஜபக்ஷேவுக்கு எதிராக கையெழுத்திட மறுத்ததால் அவர் துரோகியா என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்! 
இது பற்றி நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் தனது உள்ளக் குமுறலை என்னிடம் கொட்டியிருந்தார்! அதில் ஒரு பகுதியை அப்படியே.. 
கடந்த காலத்தில் அதாவது காவலன் வந்த காலத்தில் அண்ணன் டாக்டர் விஜய் ஈழத்தமிழருக்கு ஆதரவா கொந்தளித்து குரல் கொடுத்தது உண்மைதான்! அப்போது கூட சிலர், விஜய் தனது சுயநலத்திற்காக அப்படிச்செய்கிறார் என அறிவுகெட்டதனமாக அண்ணனின் இதயசுத்தியை, நேர்மையைச் சந்தேகித்தார்கள்!  
அவர்கள் இப்போது வேலாயுதம் படம் ரிலீசாவதால் இந்த நேரத்தில் எதையாவது பண்ணினால் படம் இலங்கையில் தடை செய்யப்பட்டு விடுமென்பதால் அண்ணன் பம்முவதாகவும் கூறுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது இவர்களைப் பார்த்தால்! என்ன ஒரு அறியாமை!

அவர்களுக்காக நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்!

அண்ணன் தனது இடைவிடாத நற்பணிகளுக்கு மத்தியிலும் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து தூக்கி விடுவதாக அண்ணன் விட்ட சவால் உங்களுக்கு நினைவிருக்கா?அண்ணனே மறந்திருந்தாலும் நாங்க மறக்கமாட்டோம்! அண்ணனின் அந்தப் பேச்சால் அண்ணனின் எத்தனை ரசிகர்கள் இலங்கையைவிட்டே அவசரமா வெளிநாடுகளுக்கு ஓடினார்கள், எத்தனை பேர் இன்னும் பீதியுடன் இங்கே வாழ்கிறார்கள் என்று தெரியுமா?

இந்த சம்பவத்திற்குப் பிறகு சர்வதேசமே அண்ணனின் நடவடிக்கைகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இந்தக்கையெழுத்து எவ்வளவு தீவிரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஏன் இவர்கள் புரிந்த கொள்ள மறுக்கிறார்கள்? 

அவரது பேச்சில் பாதி புரியாததால் அதில் நியாயமிருப்பதாகவே தோன்றியது!

இந்த விஷயத்தில், 'சரியாகப் புரிந்துகொள்ள முடியாத கருத்துக்கள் பெரும்பாலும் நியாயமானவையாகவே இருக்கின்றன' என்ற ஜியோக்கியூட்ரசின் (கி.மு.781 - 827) வார்த்தைகளை நான் நம்புகிறேன்!

நான் சில பதிவுகளில் டாக்டர் விஜயை கலாய்த்ததாக வருத்தப்பட்டார்கள் சில நண்பர்கள்! இனி அப்படி நடந்து கொள்வதாக இல்லை - அதனால்தான் எனது கருத்தைச் சொல்லாமல் ஒரு ரசிகனின் குமுறலை பதிவு செய்திருக்கிறேன்! 

தமிழகத்தின் ஒரு பிரபல 'நடுநிலை' நாளிதழ்தான் இந்த விஷயத்தில் இப்படி விஜய்யைக் கோர்த்து விட்டதாகவும் சொல்கிறார்கள்! இதுவும் உண்மையாகவே இருக்கலாம்!

அதே நாளிதழ்தான் மூன்று வருஷத்துக்கு முதல் அஜித்தைக் கோர்த்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்!அந்த நேரத்தில் நம்ம நண்பர்களான புலம்பெயர் நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் சிலர் உற்சாகமாக ஏகனைப் புறக்கணிப்போம்னு Facebook ல ஒரு Page கிறியேட் பண்ணி இருந்தார்கள்!  

புலம்பெயர் தமிழர் எல்லாரும் வெற்றிகரமாக புறக்கணித்ததால்,'எஸ்' ஆகிட்டாய்ங்க! நாமதான் தெரியாம போயி.. சோகன் ஆகிட்டோம். 

அந்தப் புறக்கணிப்பாலதான் அந்த அருமையான படம் ஊத்திக்கிச்சுன்னு இன்னும் சிலபேர் சீரியஸா நம்பிட்டிருக்காய்ங்க - இயக்குனர் ராஜூசுந்தரம் உட்பட!


அதே நேரம் இந்த சர்ச்சைக்கு தகுந்த பதில் சொல்வதற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் உட்கார்ந்து கடுமையாக யோசித்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் நல்லதொரு பதில் தருவார் என்றும் அவர் சொன்னார்! 

மேன்மை தங்கிய திரு.எஸ்.ஏ.சியின் அறிக்கைகள், கருத்துகள் என்றுமே பொருள் பொதிந்தவை! ஆழமாக சிந்திக்கத் தூண்டுபவை!

திமுக வின் படுதோல்விக்கு என்ன காரணம்? இதற்கான பதில் தேடி பத்திரிகையாளர்கள், பதிவர்கள், உடன்பிறப்புகள், ஏன் ஜெயலலிதா கூட தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது எஸ்.ஏ.சி. அதற்கான காரணத்தை மிக எளிமையாக விளக்கினார். அதாகப்பட்டது,

'கடந்த தேர்தலில் புதிய வாக்காளர்களில் ஐம்பது வீதமானோர் விஜய் ரசிகர்கள்!'

மீதி ஐம்பது வீதம்? 

அவர்கள் எஸ்.ஏ.சி.யின் ரசிகர்கள் என்பதை அவர் சொல்லி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை!    

தனது தாயாரின் வைர நகைகளை கேத் மிடில்டனுக்கு வழங்கிய வில்லியம்!!

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் திருமணம் கடந்த ஏப்ரல் 29ந் திகதி கோலாகலமாக நடந்தது.

இதற்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்தத்தின் போது மறைந்த தனது தாயார் டயானாவின் மோதிரத்தை கேத்ரீனுக்கு வில்லியம் அணிவித்தார். அந்த மோதிரம் நீலக்கல் மற்றும் வைரம் பதிக்கப்பட்டது. இது உலக மக்களை மிகவும் கவர்ந்தது.

இந்த நிலையில் தற்போது மனைவி இளவரசி கேத்ரீனுக்கு தனது தாயார் டயானாவின் ஒரு ஜோடி வைர கம்மல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதுவும் வைரம் மற்றும் நீலக்கல் பதிக்கப்பட்டவை. 

இவை ஏற்கனவே அவர் வழங்கிய நிச்சயதார்த்த மோதிரத்துக்கு இணையாக உள்ளன. மோதிரம் மற்றும் கம்மல்கள் அனைத்தும் 18 காரட் வைரங்களால் ஆனவை. இவை இளவரசி டயானாவுக்கு மிகவும் பிடித்தமானவை. 

கடந்த 1980 முதல் 1990ம் ஆண்டுகளில் பல விதமான கம்மல்களை அவர் அணிந்து மகிழ்ந்தார். சமீபத்தில் கனடா மற்றும் அமெரிக்கா சென்ற போது இளவரசி கேத்ரீன் இந்த கம்மலை அணிந்து தான் சென்று இருந்தார். கடந்த 1983ம் ஆண்டு கனடா சென்ற டயானாவும் இதே கம்மலை தான் அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பிரபுதேவா வலையில் - சமீரா ரெட்டி!

டான்ஸ் டைரக்டர் பிரபுதேவாவின் பிரபாகரன் படபிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருகிறதாம். இதற்காக நடிகை சமீரா ரெட்டி கொல்கத்தா சென்றுள்ளாராம். இதை அவரே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படம் பிரபாகரன். தெலுங்கில் சூப்பர்ஹிட்டான சவுரியம் படத்தின் ரீமேக் தான் பிரபாகரன்.

இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி கொல்கத்தாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து படத்தின் நாயகி சமீரா ரெட்டி டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலத்தில் பாடல் படபிடிப்பு. அருமையான தட்ப வெட்பம். இயக்குனர் பிரபுதேவாவின் படத்திற்காக டான்ஸ் ஆடுகிறேன் என்றார்.

நல்லா ஆடுங்க!



Channel 4 நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை: கோத்தபாய கோரிக்கை

கொழும்பு, ஜூலை.29: பொறுப்பற்ற விடியோ காட்சிகளை ஒளிபரப்புவது தொடர்பில் பிரிட்டன் அரசு சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபட்ச கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த புதன்கிழமை சேனல் 4 தொலைக்காட்சி, இலங்கையில் போர்க்குற்றம் என்ற தலைப்பில் புதிய விடியோ ஒன்றை  ஒளிபரப்பியது.அதில், இறுதிப்போரின் போது சரணடைந்தவர்களை கொல்லுமாறு அப்போதைய வன்னி கட்டளையதிகாரியாக இருந்த சவேந்திர சில்வாவுக்கு கோத்தபாய உத்தரவிட்டதாக காட்சிகள் இருந்தன.

இதற்காக சவேந்திர சில்வாவுடன் பணியில் இருந்த இரண்டு ராணுவ வீரர்களின் பேட்டியை சேனல் 4 ஒளிபரப்பியது.இது முற்றிலும் பொய்யான விடியோ என்று குறிப்பிட்டுள்ள கோத்தபாய, இறுதிப்போரின் போது என்ன நடந்தது என்று சவேந்திர சில்வா அனைவருக்கும் கூறுவார். எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்றும் அவர் தெரிவிப்பார் என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் அப்போது ஐக்கிய நாடுகளின் உறைவிடப் பிரதிநிதியாக இருந்த நீல் பூஹ்னே, யாரும் சரணடைவது குறித்து தமக்கு அறிவிக்கவில்லை.இந்தநிலையில் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு கூறமுடியும் என்றும் கோத்தபாய கேள்வி எழுப்பினார்.

முல்லைத்தீவு அரசு அதிபரின் தகவல்படி 3 லட்சம் பொதுமக்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தனர்.போர் முடிந்த போது 294 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளில் பலர் போரின் போது கனடா மற்றும் இந்தியாவுக்கு தப்பிச்சென்றனர்.தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படைத் தளபதியாகவிருந்த சூசை மற்றும் தமிழ்செல்வனின் குடும்பங்கள் கடல்வழியாகத் தப்பிச்செல்லும் போது கைதுசெய்யப்பட்டனர்.

சூசை பல கடற்படையினரின் கொலைகளுக்கு பொறுப்பு என்ற அடிப்படையில் தாம், அவர்களை கொன்றிருக்கலாம். ஆனால் அவர்களின் குடும்பத்தினரை இலங்கை அரசாங்கம் இன்றும் பாதுகாக்கிறது.பிரபாகரனின் பெற்றோரை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் பராமரித்தது.சரணடைந்த 11,000 தற்கொலையாளிகள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டனர்.தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான பெண் ஒருவரை, 200,000 பொதுமக்கள் மத்தியில் இருந்து படையினர் காப்பாற்றியதை முந்தைய விடியோ காட்சிகள் நிரூபித்துள்ளதாகவும் கோத்தபாய தெரிவித்தார். 

Source by : Dinamani 

உயிரைப் பறித்த China Mobile

China Phone
குஜராத் மாநிலத்தில், பஞ்ச்மஹால் மாவட்டத்தில் வசித்த தஞ்சி தாமூர் என்ற பெயர் கொண்ட 25 வயது வாலிபர், சீன போன் ஒன்றினால் தன் உயிரை இழந்துள்ளார். மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் குறைந்த சீனாவில் இருந்து இறக்குமதியான மொபைல் ஒன்றை சார்ஜ் செய்தவாறு பேசுகையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிக வோல்டேஜ் அளவில் உடம்பில் மின்சாரம் பாய்ந்து உயிரைப் பறித்ததாக, இவரின் உடம்பினைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போன்களை அடையாளம் காட்டும் தனி எண்கள் இல்லாத மொபைல் போன்களுக்கு இந்திய அரசு தடை விதித்த பின்னரும், மலிவான சீன போன்கள் இன்னும் இந்தியாவில் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பல வசதிகளுடன், மிகக் குறைந்த விலையில் இவை கிடைப்பதால், இவற்றைப் பெரும்பாலான மக்கள், குறிப்பாக கிராமப் புற மக்கள், வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
எந்த தர அடிப்படைக்கும் ஏற்றதாக இந்த போன்கள் இருப்பதில்லை. 
சீனாவில் ஆயிரக்கணக்கானோர் இது போன்ற போன்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஷான்ஷாய் போன்கள் எனப் பொதுவாக இவற்றை அழைக்கின்றனர். பிரபல நிறுவனங்களின் போன்கள் போல இந்த போன்கள் தயாரிக்கப்படுவதால், ஆங்கிலம் தெரியாத பலர் இதனால் ஏமாற்றப் படுகின்றனர்.
இந்த போன்களைத் தயாரிக்கும் போதே, சில கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களும் பதிந்தே அனுப்பப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, சீன அரசு இவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரிய வில்லை. சென்ற ஆண்டு இதே போல ஒரு பெண், சீன மொபைல் போனால் மின்சாரம் தாக்கி இறந்தது நினைவிருக்கலாம்.

அஜீத்தின் மங்காத்தா படத்திற்கு சிக்கல்!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் 50வது படமான "மங்காத்தா" படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் தயங்கி வருகின்றனர். இதனால் மங்காத்தா படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜீத், அர்ஜூன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி அமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் "மங்காத்தா". இதுவரை அஜீத்தை பார்த்திராத வித்யாசமான கேரக்டருடனும், வித்யாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் இப்படம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அஜீத்திற்கு இது 50வது படமும் கூட. இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் மங்காத்தா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் ‌எல்லாம் முடிந்து ரிலீஸ் செய்வதற்கான வேலை நடந்து வருகிறது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல விலைக்கு இப்படம் விற்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இப்படத்தை வாங்க இன்னும் யாரும் முன்வரவில்லை. இதற்கு காரணம், இப்படத்தினை தயாரித்து இருக்கும் துரை தயாநிதியின் தயாரி்ப்பு தான். இவர் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் ஆவார்.

விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்குமே நம்பிக்கை தரும் வகையில் இப்படம் அமைந்திருந்தாலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், தயாநிதி அழகிரி பேனரில் படத்தை வாங்குவதற்கும், அதனை ரிலீஸ் செய்வதற்கும் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மங்காத்தா படக்குழு முழித்து கொண்டு இருக்கிறது.

இதுஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் அஜீத்தே தனது சொந்தப் பொறுப்பில் இந்தபடத்தை வெளியிட வேண்டும் என்றும், ஒரு முறை முதல்வர் ஜெயலலிதாவை போய் பார்த்து விட்டு வர‌ வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அஜீத்தோ, நான் அப்படி போய் பார்த்தால் அது சுயநலத்துக்காக செய்த மாதிரி ஆகிவிடும். படத்தை தைரியமாக வெளியிடுங்கள், ஒன்றும் ஆகாது என்று கூறி வருகிறாராம்.

என்னிடம் என்ன இருக்கு? ரசிகர்களுக்கு த்ரிஷா கேள்வி!!

என்னிடம் என்ன இருக்கிறது என்று என்னைப்பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்? என நடிகை த்ரிஷா, ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கிசுகிசுவுக்கும், த்ரிஷாவுக்கும் ரொம்பவே நெருக்கம் அதிகம். வாரத்திற்கு ஒரு கிசுகிசுவாவது அம்மணியைப் பற்றி வந்துவிடும். அந்த வகையில் புதிதாக வந்திருக்கும் செய்தி, அம்மணிக்கும், அமெரிக்க தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும், மாப்பிள்ளையை த்ரிஷாவின் தாயார் உமா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதுதான். இதனை மறுத்துள்ள த்ரிஷா, வதந்திகளை பரப்புபவர்களையும், ரசிகர்களையும் வசை பாடியிருக்கிறார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எந்த ரகசியமும் இல்லை. ஆனாலும் என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. கற்பனையான செய்திகளை பரப்புகிறார்கள். எனக்கு அமெரிக்க மாப்பிள்ளையை பார்க்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. ஒரு நடிகருடன் திருமணம் நடக்கப் போவதாகவும் வதந்திகள் பரவி உள்ளது. இப்படி என் திருமணத்தை பற்றி விதவிதமான செய்திகள் வந்தபடி உள்ளன. ரசிகர்களுக்கு இதனால் என்ன பயன் என்று எனக்கு புரியவில்லை. நடிகைகளின் சொந்த வாழ்க்கைப்பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புவதாகவும் அதனால்தான் இதுபோன்ற செய்திகள் வருவதாகவும் கூறுகின்றனர்.

என்னிடம் என்ன இருக்கிறதென்று ரசிகர்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என தெரியவில்லை. இதைத் தெரிந்து கொண்டு அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? நான் ரகசிய திருமணம் செய்ய மாட்டேன். எந்த விஷயத்தையும் பகிரங்கமாக அறிவித்து விட்டுதான் செய்வேன். ரசிகர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசியுடன்தான் எனது திருமணம் நடைபெறும், என்று கூறியுள்ளார்.

தெரிந்துகொள்ளுங்கள் இணையத்தில் இப்படியும் சம்பாதிக்கலாம்!

இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அதில் 100 இற்கு 90 வீதமானவை போலியானவையே அதாவது பணம் தராமல் ஏமாற்றுவது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.என்னால் குறிப்பிட்ட தளம் மூலம் பணம் பெற்றவை மாத்திரம்தான் உங்களுக்கு அறிமுகம் செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இணையத்தில் மிக மிக இலகுவானது ஒன்றுதான் PTC (Paid To Click) எனப்படும் தளம் மூலம் சம்பாதிப்பது.இது எப்படி வேலை செய்கிறது என்று இன்று பார்ப்போம்.
TV முன் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடையில் பல விளம்பரங்கள் வருவதை நீங்கள் காண்பீர்கள் அதற்கு யாராவது பணம் தருகிறார்களா? இல்லை  ஆனால் இணையத்தில் குறிப்பிட்ட விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்தால் பணம் கிடைக்கும் தெரியுமா?....எப்படி?? (எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஒரு சந்தேகம் பணத்தை எப்படி நம்முடைய கைக்கு கொண்டுவருவது என்பது, அதற்கு முதல் இதை தெரிந்து கொள்வோம் பின்னர் தெளிவாக விளக்குகிறேன் )


விளம்பரதாரர்   தனது பொருளை அல்லது சேவையை  நுகர்வோருக்கு தெரிவிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட  அளவு பணத்தை குறிப்பிட்ட தளத்தில் செலுத்துவார்.எப்படி என்றால் 500 முறை க்ளிக் செய்வதற்கு $5.00 என்ற  அடிப்படையில் ( இந்த அளவு ஒவ்வொரு தளத்திலும் மாறுபடும் உதாரமாக 1000 முறை க்ளிக் செய்வதற்கு  $1.00 or 100 முறை க்ளிக் செய்வதற்கு $2.00  என்றும் ஒரு சில தளங்கள் வழங்குகின்றன), இதனை நாம் ஒரு முறை க்ளிக் செய்து 30 வினாடிகள் பார்ப்பதற்கு ஒரு சிறிய அளவு பணம் ($0.01) நம்முடைய கணக்கில் சேரும்,குறிப்பிட்ட அளவு பணம் நம்முடைய கணக்கில் ($2.00) வந்ததுடன் Alertpay அல்லது Paypal மூலமாக தனது பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் (paypal (PP) or Alertpay (AP) பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்).



PTC தளம்மை பொருத்வரையில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 விளம்பரங்களை பார்க்க முடியும் (ஆனால் இன்று இது மாறிக்கொண்டு வருகிறது எப்படி என்றால் அந்த தளத்தில் எத்தனை விளம்பரங்கள் இருந்தாலும் அணைத்தையும் க்ளிக் செய்ய முடியும்.இதிலும் பல போலியான தளங்கள் இருக்கின்றன...கவணமாக இருங்கள்....உண்மையிலேயே நல்ல தளங்களை நான் உங்களுக்கு அறிமுகம் செய்வேன் காத்திருக்கவும்). இதனை பார்வை இட்டால் ஒரு நாளைக்கு $0.04 மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். இதில் $2.00 ஆக வேண்டும் என்றால் 50 நாட்கள் (0.04 x 50 = 2) தேவைப்படும்.இதனை சில பேர் பார்த்துவிட்டு அதாவது 50 நாட்களுக்கு க்ளிக் செய்தால் $2.00 மட்டும்தான? என்று நினைத்துவிட்டு இதனை விரும்பாமல் இருக்கலாம்.அப்படி என்றால் இதைவிட கூடிய பணம் தரக்கூடிய தளம் அதாவது ஒரு முறை க்ளிக் செய்தால் $0.10 என்று வேறுதளம் இல்லையா?  என்று பார்ப்போம்.


ஒரு விளம்பரத்தை பார்த்தால் $1.00 என்று சொல்லும் பல போலியான தளங்கள் இருக்கின்ற இவர்களுடைய Payout minimum வந்து $10000 ஆக இருக்கும் இந்த பணத்தை நாம் பெருவதற்கு பல வருடங்கள் செல்லும்.இதில்தான் நம்மில் பலர் ஏமாந்து இணையத்தில் பணம் சம்பாதிப்பது பொய் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.அப்படி என்றால் PTC இல் முதலீடு இல்லாமல் சம்பாதிப்பதற்கு வேறு வழி என்ன???


முதலீடு செய்து செய்து கொண்டு குறிப்பிட்ட தளத்தில்  Upgrade  உம்  Rented Referral உம் வாங்கினால் நிறைய சம்பாதிக்க முடியும் ( இது பற்றி பின்னர் தெளிவாக விளக்கம் தரப்படும்) முதலீடு இல்லாமல் $2.00 ஐ இரண்டு நாட்களிலும் பெற்றுக்கொள்ள முடியு(மா?)ம்.இதற்கான ஒரு ஏற்பாடுதான் Direct Referral (DR) ஆகும்.அப்படி என்றால்?

அடுத்த பதிவில்...........

>> Direct Referral & Rented Referral என்றால் என்ன? இரண்டிற்கும் இடையில் உள்ள            வித்தியாசம்    என்ன?
>> ஒரே தளத்தில் பல முறை register செய்து கொள்ள முடியுமா?
>>  ஒரே நாளில் $2.00 ஐ பெறுவது எப்படி?
>> ஏன் referral link மூலம் இணையவேண்டும்?
>>  PTC சம்பந்தமான உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் cpcmicronet@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

9வது மாடியிலிருந்து தாயின் கையிலிருந்த குழந்தை தவறி விழுந்து பலி

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 9 வது மாடியில், தாயின் மடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை பலியானது.

பெங்களூருவில் ஜே.பி.நகர் பகுதியில் உள்ள ஆதர்ஷ் ரிதம் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 9 வது மாடியில் வசிப்பவர் விஷால் காஷ்யப். மென்பொருள் பொறியாளர். இவரது மனைவி அம்ருதா. இவர்களது மகன் அர்மான் (ஒன்றரை வயது). 

நேற்று காலை அம்ருதா, குழந்தை அர்மானுக்கு உணவு ஊட்டுவதற்காக வராண்டா பகுதிக்கு வந்தார். பால்கனி வழியாக வேடிக்கை காட்டிய வண்ணம் உணவு ஊட்டிய போது, குழந்தை அர்மான் திடீரென குதித்தான். இதில் அம்ருதாவின் கையில் இருந்து தவறிய குழந்தை, 9 வது மாடியில் இருந்து, 8 வது மாடியில் உள்ள வராண்டா சுவரில் மோதியபடி தரையில் வந்து விழுந்து அந்த இடத்திலேயே இறந்தான். 
குழந்தையின் நிலையை கண்ட அம்ருதா மயங்கி விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டொக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஜே.பி.நகர் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.



இங்கிலாந்து இந்தியாவுக்கு வெச்ச ஆப்பு

ஸ்கோர் விபரம்
இங்கிலாந்து 1வது இன்னிங்ஸ்
474/8 ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது (பீட்டர்சென் 202*, ட்ரொட் 71, பிறவீன் 5-106)

2வது இன்னிங்ஸ் 269/6 ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது (மெட் பிரியர் 103*, பிரோட் 74*, இஷாந்த சர்மா 4-59)

இந்தியா
1வது இன்னிங்ஸ் 286/10 (ட்ராவிட் 103*, பிரோட் 4-37, ட்ரம்லட் 3-80)
2வது இன்னிங்ஸ் 261/10 (ரைனா 78, லக்ஸ்மன் 56, அன்டர்ஸன் 5-65, பிரோட் 3-57)
இந்தியா 196 ஓட்டங்களினால் தோல்வி.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 8 விக்கட்டுக்ளை இழந்து 474 ஓட்டங்களைப்பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 286 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பின்னர் 188 ஓட்டங்கள முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்களைப்பபெற்று தனது 2வது இன்னிங்சை இடைநிறுத்திக்கொண்டது.

458 ஓட்டங்கள என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி ஆட்டத்தின் இறுதி நாளான இன்று 261 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரெய்னா(78), லட்சுமணன்(56), டிராவிட்(36), காம்பீர்(22), டோனி(16) ஓட்டங்களை பேற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணி சார்பில் அண்டர்சன் 5 விக்கெட்டுக்களையும் பிரோட் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்தின் கெவின் பீட்டசென் தெரிவானார்


சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் (Projector Mobiles)

புரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங்களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின்றன. இதனை கல்லூரி, அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தொழில்நுடபத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனிலிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை எந்த இடத்திலும் பெரிது படுத்திப் பார்க்க வழிசெய்திருக்கிறார்கள். இதனால் எதேனும் கூட்டங்களில் எளிமையாக நாமும் விளக்கப்படங்களையும் திரைகளில் காட்டி விளக்கம் அளிக்கலாம். போனில் உள்ள படங்களை பெரிதாகப் பார்த்து மகிழலாம். 

இந்த வகையிலான மொபைல்கள் புதிய தொழில்நுட்பம் என்பதால் இன்னும் அதிகமான மாடல்கள் வரவில்லை. சிறப்பான புரஜெக்டர் சேவைக்கு என்ன வேண்டும் எனப்பார்க்கலாம். எந்த வீடியோ பார்மேட்டை (Video format) புரஜெக்டர் காட்டக்கூடியது, ஒளிப்பட பார்மேட்(Picture Formats), மொபைல் திரையளவு(Display), தெளிவான வீடியோ (Video brightness) மற்றும் தரம் போன்றவற்றைச் சோதித்து வாங்குவது நலமானது. தற்போது சிறப்பாக உள்ள புரஜெக்டர் போன்களைப் பற்றி பார்க்கலாம்.


1.Intex V Show Projector Phone 8810
இன்டெக்ஸ் நிறுவன போன்கள் வழக்கமாக இரட்டை சிம் வசதியுடையன. இதிலும் இரட்டை சிம் வசதியுடன் இரட்டை மெமரி கார்டு ஸ்லாட் (Dual Memory slot) வசதியிருக்கிறது. இரண்டிலும் தலா 8 GB வரை போட்டுப் பயன்படுத்தலாம்.
இதன் தொடுதிரையளவு 3.2”. படங்களை தியேட்டரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருமாம்.இதனுடன் போனை வைத்து புரஜெக்ட் செய்ய Tripod Stand தரப்படுகிறது. விலை Rs. 12000
 




2.Samsung Galaxy Beam i8520 
இது ஒரு சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் வகையைச் சார்ந்தது. இதன் DLP WVGA புரஜெக்டர் சிறப்பான முறையில் படங்களைக் காட்டக்கூடியது. மேலும் இதன் 8 MP கேமராவில் படமெடுக்கும் போதே புரஜெக்ட் செய்யும் வசதியிருக்கிறது. உயர்தர HD வீடியோக்களை எடுக்கவும் உதவும். 
இது சாதாரண புரஜெக்டர் போன் மட்டுமில்லாது ஆண்ட்ராய்டு 2.1 இயங்குதளம், வை-பை, 3G, 3.7” தொடுதிரை போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் விலை Rs. 35000





3. Spice Popcorn Projector M9000
குறைந்த விலையில் தரமான வசதிகளோடு ஸ்பைஸ் நிறுவனம் பாப்கார்ன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மொபைலில் இரண்டு சிம் வசதியுள்ளது. இதில் பலவகையான வீடியோ மற்றும் ஒளிப்பட வகைகளையும் தெளிவாக காட்டக்கூடிய வசதியிருக்கிறது. லைவ் டீவி மொபைலில் பார்த்தால் அதையும் புரஜெக்ட் செய்யலாம். இந்நிறுவனத்தின் விளம்பரங்கள் மூலம் விற்பனை நன்றாக உள்ளது. இதன் விலை 6000 ருபாய் மட்டுமே.




5. Intex V Mini theatre 8809
இண்டெக்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு புதிய மொபைலான இதில் புரஜெக்டர் காட்சியமைப்பு தெளிவாக இருக்கிறது. இரட்டை சிம் வசதி, 2.4” தொடுதிரை அளவு, 2MP கேமரா போன்ற வசதிகளையும் 3gp, avi, mp4 போன்ற வீடியோ வகைகளை காட்டும் வசதியும் கொண்டது. இதன் விலை 6200 ருபாய். இது ஸ்பைஸ் நிறுவனத்தின் பாப்கார்ன் மொபைலின் போட்டியாக கருதப்படுகிறது.
 


சினிமாவிலிருந்து நான் விலக மாட்டேன் - நயன்தாரா


ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதது
உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப்போவதற்காக நான் அழுததாக
அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன்தாரா கூறியுள்ளார்.
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
திருமணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது.
தெலுங்கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப்பிடிப்பு
சில தினங்களுக்கு முன் முடிந்தது. படப்பிடிப்பின் கடைசி நாளில் அவர் கதறி
அழுததும், படக்குழுவினர் அனைவரிடமும் பிரியா விடை பெற்றதும் கடந்த வாரச்
செய்திகள்.
இது அழுகையும் பிரியா விடையும் சினிமாவுக்கும் சேர்த்துதான் என்று கூறப்பட்டது.
அப்போது செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்த நயன்தாரா, இப்போது சினிமாவை
நான்விலகமாட்டேன், என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,நான் சினிமாவை விட்டு விலகப்போவதாக வந்த
செய்தியில் உண்மையில்லை. ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பில் அழுததற்கான காரணமே
வேறு. என்னையும் மீறி என் மன வேதனை கண்ணீராய் வெளிப்பட்டுவிட்டது.
இன்னொரு பக்கம் ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பு குழுவினர் பாட்டு பாடி என்மேல் பூக்களை தூவி வழியனுப்பினார்கள். என் அழுகைக்கு அதுவும் ஒரு காரணம்.கடந்த ஆண்டு நான்நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட். நான் எதற்கு விலகப் போகிறேன், என்றார்.
எதுக்கும் பார்த்து பேட்டி கொடுங்க அடுத்த செய்தி பிரபுதேவாவிடமிருந்து நயன் விலகல் என்று வரக்கூடும்!

Nokia, Appleளிடம் தோல்வி

கையடக்கத்தொலைபேசி சந்தையில் 1990 ஆம் ஆண்டு முதல் தனக்கென ஒரு தனியிடத்தினை பிடித்திருந்த நொக்கியா முதற்தடவையாக அப்பிளிடம் தனது இடத்தினை இழந்தது.
கடந்த பல மாதங்களாக நொக்கியா தனது சந்தையினை சிறிது சிறிதாக இழந்து வந்தது.

அந்நிறுவனத்தின் அறிக்கைகளின் படி 2011 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் தனது விற்பனை 34% குறைந்துள்ளதாகவும் 16.7 மில்லியன் கையடக்கத்தொலைபேசிகளை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் அப்பிள் 20 மில்லியன் ஐ போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது நொக்கியாவிற்கு பாரிய அடியாகும்.

மேலும் தென்கொரிய நிறுவனமான செம்சுங் நொக்கியாவை முந்தும் நிலையில் உள்ளதாகவும் அதன் அறிக்கை வெளியாகும் போது அதன் நிலை இதைவிட சிக்கலாகுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த 2010 ஆம் ஆண்டில் நொக்கியாவின் சந்தைப் பங்கானது 38 வீதத்திலிருந்து 28 வீதமாக வீழ்ச்சியடைந்தது.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்பிள் மற்றும் கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினைக்கொண்டியங்கும் கையடக்கத்தொலைபேசிகளும் சந்தையில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றமை பிரதான காரணமாகும்.

இதனோடு நொக்கியா இன்று வரை தனது 'சிம்பியன்' இயக்குதளத்தினை கொண்டியங்குவதே அதன் தோல்விக்கான மற்றுமொரு பிரதான காரணமாகும்.

இதனைத் தவிர்க்கவே நொக்கியா விண்டோஸ் உடன் கைகோர்ப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. எனினும் கையடக்கத் தொலைபேசிச் சந்தை வேகமாக வளர்ந்துவரும் நிலையில் நொக்கியா தனது இடத்தினை தொடர்ச்சியாக இழந்து வருகின்றது.

சீன நிறுவனமான 'ZTE' மற்றும் 'RIM' இன் பிளக்பெரி ஆகியவையும் குறிப்பட்ட அளவில் வளர்ச்சியடைந்து வருகின்றமை நொக்கியாவிற்கு மேலும் சவாலாளிப்பதாகவுள்ளது.

நொக்கியா வெகுவிரைவில் புதிய இயக்குதளத்தினை உபயோகிப்பதுடன் பல முன்மாதிரியான கையடக்கத்தொலைபேசிகளை தயாரிக்காவிடில் சந்தையில் காணாமல் போகும் நிலை வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி.


டிவி பார்ப்பதை மாற்றிக்காட்டும் அற்புத Iphone

செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது.
 
அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது.
தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் இந்த செயலி அதனை செய்யும் விதம் தான் மாயஜாலமாக இருக்கிறது.

அதாவது டிவி பார்த்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டிய தேவை கூட கிடையாதௌ.இந்த செயலியே அந்த நிகழ்ச்சி என்ன என்பதை தெரிந்து கொண்டு அது பற்றிய தகவலை நண்பர்களுக்கு தெரிவிக்கும்.நேயர்கள் பார்ப்பது என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி செயலி அதனை கண்டுபிடித்து விடும்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாடல் காட்சியை பார்த்ததுமே அந்த பாடலின் படம் எது என்பதை சிலர் சொல்லிவிடுவது உண்டல்லவா?அதே போலவே இந்த செயலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நொடிப்பொழுதில் கண்டு பிடித்து சொல்லி விடும்.
டிவி பார்த்து கொண்டிருக்கும் போது இந்த செயலியில் உள்ள பச்சை பட்டனை ஆன் செய்தால் போதும் அப்போது ஒளிபரப்பாவது என்ன நிகழ்ச்சி என்பதை செயலி கண்டுபிடித்து விடும்.
சில நேரங்கள் நிகழ்ச்சியை பார்ப்பவரே கூட பாதியில் இருந்து பார்ப்பதால் அது என்ன நிகழ்ச்சி என்று தெரியாமல் முழிக்ககூடும்.ஆனால் இந்த செயலி எந்த நிகழ்ச்சியையும் நச் என சொல்லிவிடும்.எந்த சேனலை மாற்றி எந்த நிகச்சியை காட்டினாலும் சரி இந்த செயலி சளைக்காமல் பதில் சொல்லும்.

எப்படி இது சாத்தியம்?
இன்டுநவ் உருவாக்கியுள்ள சவுண்டு பிரிண்ட் என்னும் தொழில்நுட்பமே இந்த மாயத்தின் பின்னே உள்ளது.செல்போன்களில் பயன்படும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் எப்படி இருப்பிடத்தை உணர்ந்து சொல்கிறதோ அது போலவே இந்த தொழில்நுட்பமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒலி அலைகளை அலசி அந்த ஒலி அலைகளில் உள்ள தனித்தன்மைகளின் அடிப்படையில் ஒளிப்பரப்பாகு நிகழ்ச்சி எது என்பதை உணர்ந்து கொள்கிறது.
பிரித்து மேய்வது என்று சொல்வது போல சவுண்ட் பிரிண்ட் தொழில்நுட்பம் நிகழ்ச்சி ஒலிகளை சின்ன சின்ன பகுதிகளாக பிரித்து கொண்டு அதனை தன்வசம் உள்ள தகவல் பேழையில் ஒப்பிட்டு பார்த்து செயல்படுகிறது.இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்க தொலைகாட்சிகளில்  ஒளிபரப்பான  அனைத்தையும் தனது தகவல் பேழையில் சவுண்ட்பிரிண்ட் கொண்டுள்ளது.அதாவது 14 கோடி நிமிடங்களுக்கு நிகரான நிகழ்ச்சி தகவல்கள் இதனிடம் உள்ளது.

எனவே எந்த சேனலில் எந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானலும் சவுண்ட பிரிண்ட அறிந்து கொள்ளும்.
இதன் பயனாகவே டிவி பார்ப்பவர்கள் அந்த நிகழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் நிகச்சியின் பெயரை கூட குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.செயலியை ஆன் செய்தால் அதுவே நிகழ்ச்சி பற்றிய தகவலை தெரிவித்துவிடும்.

எல்லாம் சரி,இப்படி பகிர்ந்து கொள்வதால் என்ன பயன்?
எதையும் நண்பர்களோடு பகிரும் பேஸ்புக் யுகத்தில் இந்த கேள்வியே அர்த்தமற்றது தான்.
டிவி நிகழ்ச்சிகளை தனியே பார்த்து ரசிப்பதைவிட நாம் பார்த்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி பற்றிய விவரத்தை நண்பர்களுக்கு தெரிவிப்பது சுவாரஸ்யமானது தானே.அப்படியே நாம் டிவி பார்க்க அமரும் போது நண்பர்கள் எந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் புதிய நல்ல நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படலாம்.நம்முடைய நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் பரிந்துரைக்கும் பல நிகழ்ச்சிகள நமக்கு பிடித்தமானதாக இருக்கும் அல்லவா?ஆனால் பல நேரங்களில் நண்பர்கள் பாராட்டி சொல்லும் நிகழ்ச்சியை நாம் பார்க்க மற்ந்திருப்போம்.பின்னர் அடடா பார்க்கமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவோம்.

இந்த செயலியை பயன்படுத்தும் போது இத்தகைய ஏமாற்றம் ஏற்பட வழியே இல்லை.நம் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளை அப்போதே தெரிந்து கொண்டு விரும்பினால் பார்த்து ரசிக்கவும் செய்யலாம்.

மேலும் நம்முடைய சமூகத்தில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகலையும் சுலபமாக இனம் கண்டு கொள்ளலாம்.இதன் காரணமாக விளம்பர நிறுவங்கள் சொல்லும் பொய்யை கேட்டு ஏமாறவும் தேவையில்லை.
நம்மூரில் இது போன்ற செயலி வந்தால் அப்புறம் டிஆர்பி ரேட்டிங் கதைகள் எல்லாம் எடுபடாது.

இந்த செயலியை பயன்படுத்தும் போது நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான கூடுதல் விவரங்களை இனையம் மூலம் பெறவும் முடியும்.அதே போல நண்பர்கள் பார்த்த நிகழ்ச்சிகளை நெட்பிலிக்ஸ் போன்ற தளங்களில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

ஆக டிவி பார்ப்பதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது இந்த செயலி.


Fotolia

" ஒலி "மயமான எதிர்காலம் இணையத்தில் தெரிகிறது.

மவுனத்தில் ஆழ்ந்திருக்கும் இண்டெர்நெட்டை ஒலிமயமாக்குவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது சவுண்டு கிளவுட்.
அதற்கேற்ப ஒலி கோப்புகளை எளிதாக பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பாடல்களை கேட்கலாம்,ஸ்கைப் போன்ற சேவை மூலம் தொலைபேசியில் பேசலாம் என்றாலும் என்றாலும் இண்டெர்நெட் பிரதானமாக பார்ப்பதற்கும் படிப்பதற்குமானதாகவே இருக்கிறது.

ஆடியோ வசதி கொண்ட இணையதளங்கள் மற்றும் ஆடியோ புத்தகங்கள் போன்ற சேவைகள் அதிகம் இருந்தாலும் பெரும்பாலும் இண்டெர்நெட் மவுனமாகவே இருக்கிறது.
இந்த நிலையை கொஞ்சம் மாற்றி இணையத்தை ஒலிமயமாக்கும் உத்தேசத்தோடு சவுண்டு கிளவுட் அறிமுகமாகியுள்ளது.

ஒலிகளை பகிர்ந்து கொள்வதற்கான இந்த தளம் அடிப்படையில் இசை துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கானது என்றாலும் ஒலியையும் ஓசையையும் விரும்பும் எவரும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.ஒலியை மையமாக கொண்ட உரையாடலில் ஈடுபட்டு இசை மயமான நட்பை வளர்த்து கொள்ளலாம்.

ஒலியை பகிர்வதை சுலபமாக்கி இருப்பதோடு ஒலியை காட்சி ரூபத்தில் புரிந்து கொள்ள உதவுவதுமே இந்த தளத்தின் தனிச்சிறப்பு.

ஒலி கோப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராகி தங்கள் வசம் உள்ள ஆடியோ வடிவத்தை பதிவேற்றலாம்.அல்லது இந்த தளத்திலேயே ஒலிப்பதிவு செய்தும் பகிர்ந்து கொள்ளலாம்.

இதன் பிறகு தான் சுவாரஸ்யமே இருக்கிறது.பதிவேற்றிய ஒலி கோப்பை பேஸ்புக்,டிவிட்டர் மூலம் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் அந்த ஒலி கோப்பையை கேட்டு ரசித்து கருத்து தெரிவிக்கலாம்.

ஆடியோ கோப்புகள் ஒலிபரப்பாகும் போது அவற்றின் ஒலி வடிவம் வரைபட சித்திரம் போல காட்சி ரீதியாகவும் திரையில் தோன்றுகின்றன.இந்த சித்திரம் கண்ணுக்கு விருந்தாக அமைவதோடு ஆடியோவை கேட்டு ரசித்தவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் போது வரைபடத்தில் அதற்கான பகுதியை குறிப்பிட்டு கருத்து சொல்ல முடியும்.
மிகவும் நுட்பமான விஷயங்களை சுட்டிக்காட்டி விவாதிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

இசையமைப்பாளர்கள மற்றும் இசை கலைஞர்கள் தாங்கள் உருவாக்க்கிய புதிய பாடல் அல்லது இசை குறிப்பை சமர்பித்து சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்களை கேட்டறிய இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்வது போலவே மற்றவர்கள் சம்ர்பித்த கோப்புகலையும் கேட்டு ரசிக்கலாம்.இதன் மூலம் புதிய இசையை அடையாளம் கண்டு மகிழும் வாய்ப்பும் உள்ளது.மேலும் டிவிட்டரில் இருப்பது போல இதிலும் பின் தொடரும் வசதி இருக்கிறது.எனவே யாருடைய இசை கோப்பு கவர்கிறதோ அவரை பின்தொடரலாம்.கருத்து பரிமாற்றம் மூலம் உரையாடலில் ஈடுபட்டு நட்பை வளர்த்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட இசை வகையில் ஆர்வம் கொண்டவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி கொண்டு செயல்படவும் வாய்ப்புள்ளது.
இசை களைஞர்கள் இந்த சேவை மூலமாக தங்கள் இசையை பகிர்ந்து கொண்டு புதிய ரசிகர்களை தேடிக்கொள்ள முடியும்.அதே நேரத்தில் நிபுணர்களின் கருத்துக்களை அறிந்து தங்கள் படைப்பை மேலும் பட்டை தீட்டி கொள்ளலாம்.
இப்படி இசையின் அடிப்படையில் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு நட்பை வளர்த்து கொள்ள உதவுவதன் மூலம் இந்த தளம் மாபெரும் இணைய இசை சங்கமமாக உருவாகியுள்ளது.
இசை பிரியர்கள் இதில் உள்ள உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் தங்களுக்கு பிடித்தமானவர்களை தேர்வு செய்து தொடர்பு கொள்ளலாம்.புதிய குழுக்களை உருவாக்கி கொள்ளலாம்.

இசை கலைஞரான அலாக்சாண்டர் ஜங் என்பவர் தனது நண்பரோடு சேர்ந்து இந்த தளத்தை அமைத்துள்ளார்.இசை குறிப்புகளை தனது நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள முறப்ட்ட போது அதற்கேற்ற இணைய சேவை இல்லாததால் வெறுத்து போய் தானே இத்தகைய சேவைய உருவாக்க விரும்பி சவுண்ட் கிளவுட்டை உண்டாக்கியுள்ளார்.
அவர் விரும்பியது போலவே இப்போது இசைத்துறையை சேர்ந்தவர்கள் இந்த தளத்தை தான் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

அது மட்டும் அல்லாமல் சாமான்யர்களும் கூட இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இசை மட்டும் அல்லாது,பேச்சு,உரையாடல்,பாட்காஸ்டிங்,யூடியூப் கோப்பு போன்றவற்றையும் இந்த தளத்தின் வழியே பகிர்ந்து வருகின்றனர்.
இதன் நிறுவனரே கூட நினைத்து பார்த்திராத வகையில் எல்லாம் இணையவாசிகள் இந்த சேவையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இணையதள முகவரி;http://soundcloud.com/

காதலை சொல்ல ஒரு I-phone செயலி

அவளிடமும் ஐபோன் இருந்தது.
என்னிடமும் ஐபோன் இருந்தது.
ஆகவே ஒரு செயலி மூலம் காதலை சொன்னேன்.

இப்படி புதுக்கவிதை போல யோசித்து காதலை ஹைடெக்காக சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னியைச்சேர்ந்த சாப்ட்வேர் நிபுணரான சபா இடேல்கனி.

கொஞ்சம் ஆச்சர்யமான காதல் கதை தான் இவருடையது.இடேல்கனி தன்னுடையா தோழியான மெலோடியுடன் மூன்றாண்டுகளாக படகி வந்தார்.பழகத்துவங்கிய ஆறாவது மாதமே மெலோடியை காத‌லிக்கவும் துவங்கிவிட்டார்.ஆனால் இந்த காதலை சொல்லாமலேயே பழகி வந்தார்.

மூன்று ஆண்டு நெருக்கமாக பழகிய பிறகு கடந்த நவம்பர் மாதம் மெலோடியிடம் மனம் திறந்து காதலை சொல்லி மணந்து கொள்ள சம்மதமா என‌ கேட்டுவிட தீர்மானித்தார்.
காதலை சொல்வது என முடிவு செய்தவுடன் எப்படி சொவது என்னும் அடுத்த கேள்வி பிறந்தது.காதலை சொல்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை.இருப்பினும் கொஞ்சம் புதுமையான முறையில் காதலி வெளீப்படுத்த நினைத்தார்.காதலி மெலோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி காதல் சொன்ன கணத்தை மறக்க முடியாத தருணமாக மாற்ற வேண்டும் என நினைத்தார்.

தன‌க்கு முன்னர் பலர் புதுமையான வகைகளில் காதலை வெளிப்படித்தி காதலியின் கவனத்தை மட்டும் அல்லாமல் உலகின் கவத்தையும் ஈர்த்திருப்பதை அவர் படித்திருக்கிறார்.விமானத்தில் பறந்த படி காதலை சொன்ன காதலர்களை எல்லாம் நினைத்து பார்த்த இடேல்கனி தானும் அதே போல முற்றிலும் புதுமையாக காதலியின் மனதை கவர வேண்டும் என விரும்பினார்.

இப்படி தீவிராமாக யோசித்துக்கொண்டிருந்த போது தான் அவருக்கு ஐபோன் நினைவுக்கு வந்தது.அவரும் ஒரு ஐபோன் பிரியர்.காதலி மெலோடியும் ஐபோன் பிரியை.அது மட்டும் அல்ல மெலோடி வீடியோ கேம் ஆடுவதிலும் விருப்பம் மிக்கவர்.சுவாரஸ்யமான கேம் கிடைத்துவிட்டால் நாள் முழ்வதும் மெலோடி அதிலேயே மூழ்கி விடுவார்.
ஐபோனில் விளையாடக்கூடிய வீடியோ கேம்களை பலர் செயலிகளாக உருவாக்கியிருப்பதை அறிந்திருந்த இடேல்கனி தானும் ஒரு செயலி மூலமே காதலியிடம் மனதில் உள்ளதை சொன்னால் என்ன என்னும் ஐடியா மின்னல் கீற்று போல தோன்றியது.

உடனே இதற்கான செயலியை உருவாக்கித்தரக்கூடியவர்களை இணையத்தின் மூலம் தேடினார்.முதலில் ஒருவர் 750 டாலருக்கு காதலை சொல்லும் செயலியை வடிவமைத்து தருவதாக தெரிவித்தார்.ஆனால் இடேல்கனியோ அதைவிட் இருமடங்கு தொகை தருவதற்கு தயாராக் இருந்தார்.காரணம் எந்த தாமதமும் இல்லாமல் செயலி குறித்த நேரத்தில் கையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக விலையை பற்றி அவர் கவலைப்படவில்லை.இறுதியில் டெக்சாசை சேர்ந்த ஒருவர் இதற்கு ஒப்புக்கொண்டு சொன்னபடி குறித்த நேரத்தில் காதல் செயலியை உருவாக்கி கொடுத்துவிட்டார்.

ஐந்தே நாட்களில் செய்லி கைக்கு வந்து சேர்ந்துவிட இடேல்கனி குறிப்பிட்ட தினத்தன்று காதலியின் ஐபோனில் அந்த செயலியை பதிவேற்றி பயன்படுத்தி பார்க்க சொன்னார்.காதலி மெலோடியும் புதிய வீடியோ கேமை விளையாடும் சுவாரஸ்யத்தோடு அந்த செயலி காட்ட்சிய வழிகளை பின்பற்றத்துவங்கினார்.
புதையல் தேடிச்செல்லும் விளையாட்டு போல அந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருந்து.வரைபடம் ஒன்றில் பல்வேறு இடங்கள் சுட்டிகாட்டப்பட்டு அடுத்த கட்டமாக எங்கே செல்ல வேண்டும் என்ற குறிப்பும் தோன்றயவாறு அந்த விளையாட்டு முன்னேறியது.மெலோடி அந்த வழியை பின்பற்றியவாறு தனது காரில் ஒவ்வொரு இடமாக சென்று கொண்டிருந்தார்.

அந்த இடங்கள் எல்லாமே அவர்கள் காதலர்களாக சுற்றிப்பார்த்த இடங்கள் என்பது அவருக்கு மெல்ல புரிந்த நிலையில் அவருக்குள் ஒருவித எதிர்பார்ப்பு உண்டானது.இதனிடையே ஒவ்வொரு கட்டத்திலும் அவரது அனுபவங்கள் புகைப்ப‌டங்களாக அவருடைய பேஸ்புக் பக்கத்திலும் இடம்பெற்றன.இந்த வகையில் நண்பர்களும் அவரது பயணத்தை பார்க்க முடிந்தது.
சிட்னி நகரில் உள்ள ஓட்டல்கள் ,பூங்காக்கள்,ரெயில் நிலையங்கள் ஆகியவை வழியே அழைத்து சென்ற பிறகு அந்த செயலி மெலோடியை கடைசியாக அவரது வீட்டிற்கே அழைத்து சென்றது.இந்த பயணத்தின் நடுவே அவருக்கு சில பொருட்களும் கிடைத்திருந்தன.வீட்டுக்கு வந்ததும் அந்த பொருட்களை ப்யன்படுத்தி தேடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.அப்போது அவரது படுக்கை அறையில் கரடி பொம்மை ஒன்று இருந்தது.மூன்று ஆண்டுகளுக்கு முன் இடேல்கனி பரிசாக தந்த பொம்மை அது.
மேலோடியிடம் சின்ன கத்திரியும் வந்து சேர்ந்திருந்தது.உடனே அந்த கத்திரியால் பொம்மையின் மையப்பகுதியில் க‌த்திரித்து பிரித்துப்பார்த்தார்.அப்படியே பரவசத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பொம்மைக்குள் என்னை மணந்து கொள்ள விருப்பமா என்று கேட்டு காதலன் இடேகனி எழுதிய சீட்டு இருந்ததே பரவசத்திற்கு காரணம்.மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இடேல்கனி அந்த சீட்டை வைத்து பொம்மையை பரிசளித்தை நினைத்து அவர் மேலும் நெகிழ்ந்து போனார்.
இந்த தகவலை இடேல்கனி புதுமையான முறையில் தெரிவித்ததும் அவரது மக்ழிச்சியை இரட்டிப்பாக்கியது.

முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க ,கண்களில் ஆனந்த கண்ணிர் வழிய திருமண‌த்திற்கு ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார்.
செல்போனில் செயல்படக்கூடிய செயலிகள் எந்த எந்த வகையில் எல்லாம் கைகொடுக்கும் என்பதற்கான மெற்றொரு சுவாரஸ்யமான உதாரணம் இது.

உலக போராட்டங்களை அறிய ஒரு இணையதளம்.

உலகம் போராடிக்கொண்டே இருக்கிறது.அதாவது, உலகில் எங்காவது ஒரு மூளையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிற‌து.
ஆனால் எல்லா போராட்டங்களுமே உலகின் கவனத்தை ஈர்ப்பத்தில்லை.சில இருட்டடிப்பு செய்யப்படுகின்ற‌ன.சில மறைக்கப்படுகின்றன.

பல அலட்சியப்படுத்தப்படுகின்றன.ஆனால் இவற்றை மீறி ஆர்ப்பாட்டம்,பேரணி,பொதுக்கூட்டம்,கிளர்ச்சி என மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கொண்டு தான் இருக்கின்றன.
நாளிதழ்களும் ,செய்தி தளங்களும் இந்த போராட்டங்களை பதிவு செய்து கொண்டு தான் இருக்கின்றன.போர்க்குணம் கொண்டவர்கள் அதாவ்து போராட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களும்,போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறவர்களும் போராட்ட செய்திகளை தேடிப்பிடித்து படித்தும் வருகின்றனர்.

ஆனால் போராட்ட செய்திகளை எல்லாம் ஒரே இடத்தில் காணவேண்டும் என நினைத்தால் அதற்கான வழி இது வரை இல்லை.போராட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் தளங்களாக தேடிச்செல்ல வேண்டும்.சினிமா செய்தி,உலக செய்தி ,தொழில்நுட்ப செய்தி என அனைத்து வகையான் செய்திகளையும் ஒரே இடத்தில் தொகுத்து தர பல தளங்கள் இருக்கும் நிலையில் போராட்டங்களுக்கு ஒரு தளம் இல்லாதது பெருங்குறை தான்.

இந்த குறையை போக்கும் வகையில் உலக் போராட்டங்களை ஒரே இடத்தில் தரும் தளமாக வேர்ல்டு அட் புரடஸ்ட் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள்,கிளர்ச்சிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் உலகில் அதற்கேற்ப உலகில் எங்கெல்லாம் போராட்டம் நடக்கின்றன்னவோ அந்த போராட்ட செய்திகளை தொகுத்தளிக்கிற‌து.

போராட்ட செய்திகளை பலவிதமாக தெரிந்து கொள்ளலாம்.முகப்பு பக்கத்தின் மேலேயே சமீப்பத்திய போராட்ட செய்திகள் செய்தி வரிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன.அதன் கீழே உலக வரைபடம் போராட்ட வரைபடமாக விரிகிறது.வரைபடத்தில் எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடர்பான‌ செய்திகள் வருகின்ற‌ன.
வரைபடத்தில் சில நாடுகள் சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.அதன் பொருள் அந்த நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள் அதிக அளவில் உள்ள என்பதாகும்.ஒருவிதத்தில் போராட்டத்தின் தீவிரத்தையும் இவை உணர்த்தக்கூடும்.போராட்டம் தீவிரமாகும் போது செய்திகளும் அதிகமாக வெளியாக வாய்ப்புள்ளது தானே.


வரைபடத்தை சின்னதக்கியும் பெரிதாக்கியும் பார்க்கும் வசதியும் உள்ளது.அதே போல கீழே வந்தால் அங்குள்ல ஸ்லைடர் வசதியை கொண்டு பழைய போராட்டங்க‌ளை தேதிவாரியாக பார்க்கலாம்.


போராட்டத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த தளம் பேரூதவியாக இருக்கும்.ஆய்வு நோக்கிலும் இந்த தளம் பயன்படும்.மனித உரிமை ஆர்வளர்கள் அரசுகள் பொய சொல்கின்ரனவா என்று கன்கானிக்கவும் இந்த தளத்தை பய‌ன்ப‌டுத்த‌லாம்.
இப்போதைக்கு போராட்டங்கள் பற்றி நாளிதழ்களிலும் செய்தி தளங்களிலும் வெளியாகும் செய்திகளே இங்கு தொகுத்தளிக்கப்படுகின்றன.இருட்டடிப்பு செய்யப்படும் போராட்டங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை.

எனவே போராட்ட விவரங்களை இணையவாசிகள் சம‌ர்பிக்க வாய்ப்பளித்தால் மேலும் சிற‌ப்பாக இருக்கும்.அதே போல போராட்டங்கள் தொடர்பான் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகள் கூட தொகுத்தளிக்கப்படலாம்.
எகிப்திலும்,அரபு நாடுகளிலும் நடைபெற்ற மக்கள் கிள‌ர்ச்சி டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் தானே உயிர் பெற்றன.

இதே போன்றதொரு போராட்டதளத்தினை இந்தியாவுக்காகவும் தமிழகத்துக்காகவும் ஊட உருவாக்கினால் நன்றாக இருக்கும்.

போராடங்களை அறிய இணைய‌ முகவரி http://worldatprotest.com/

Internet Explorer குறிப்பிட்ட தளங்களைத் தடுப்பது எப்படி?

இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் குறிப்பிட்ட தளங்களைத் தடுப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம். ஃபயர்பாகஸில் தடுப்பது அடுத்த பதிப்பில் வெளியிடுகிறேன்.


வழிமுறை:

1)இண்டர்நெட் எக்ஸ்பளோரரைத் திறக்கவும். மெனுபாரில் உள்ள ”Tools → Internet Options → Content.” என்பதைத் திறக்கவும். ”Content Advisor box”-ல், ”Enable” என்பதைச் சொடுக்கவும்.

2)  ”Approved Sites tab” திறந்து, நீங்கள் தடுக்க நினைக்கும் இணைய தளத்தின் முகவரியை உள்ளிடவும். ORKUT.COM-ஐ தடுக்க நினைத்தால், *.ORKUT.COM என்று உள்ளீடு செய்யவும். (முகவரிக்கு முன் * என்று போட வேண்டும்.) பின், “Never" என்பதைச் சொடுக்கவும்.





3)  ”General tab”-ஐ தேர்வு செய்து,   ”Users can see websites that have no ratings” எனபதைத் தேர்வு செய்யவும்.


4) பின் புதிய கடவுச் சொல்லைத் தரவும். பின் “ok"-தேர்வு செய்யவும்.


இப்போது, ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். சந்தேகம் இருப்பின், பின்னூட்டமிடவும்.

Youtube-ல் இருந்து வீடியோகளை(mp4) தரவிறக்கம் செய்திட!

பொதுவாக youtube-ல் இருந்து .flv கோப்புகளாக தான் தரவிறக்கம் செய்ய முடியும்.  இந்த கோப்பு வகைகளை mp4 ipod-களில் காணயிலாது. எதாவது வீடியோ கண்வர்டரை கொண்டு மாற்ற வேண்டியதிருக்கும்.  அப்படியில்லாமல், உங்கள் ஃபயர்பாகஸ் உலாவியில் இருந்து கொண்டே,  youtube-ல் இருந்து நேரடியாக mp4 கோப்புகளாக தரவிறக்கம் செய்திடலாம்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை (Get Youtube Video) அப்படியே இழுத்துக் கொண்டு,  ஃபயர்பாகஸில் இருக்கும் ”Bookmark Toolbar"-ல் வைத்து விடவும்.  இனி நீங்கள் youtube இணைய தளத்தில்  வீடியோகளைக் காணும் போது, இந்த லிங்கைச் சொடிக்கி தரவிறக்கம் செய்திடுங்கள்.

இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு உதவிடும் இணையம்

இன்று நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று தினந்தோறும் இந்த கேள்வியை தான் ஒரு இணையதளம் கேட்கிறது

அந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் பதில் அளித்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே மாறிவிட வாய்ப்பிருக்கிறது. நீங்கள் நினைத்ததை முடிப்பவராகலாம்.
இணையதளம் கேட்கும் கேள்விகெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசபடவோ
குழப்பமடையவோ வேண்டாம். காரணம் இந்த இணையதளம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு தான் கேள்வி கேட்கிறது. தவிர இந்த தளத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டால் நீங்களும் ஆர்வத்தோடு இந்த கேள்விக்கு பதில் அளிக்கவே விரும்புவீர்கள்.
திட்டமிடல் சேவையை வழங்கும் ஐ டன் திஸ் எனும் தளம் தான் "இன்று என்ன செய்தீர்கள்?" என்ற கேள்வியை உரிமையோடு கேட்கிறது. இதற்கு பதில் அளிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நிர்வகித்து கொள்ள முடியும் என்றும் சொல்கிறது. இந்த கருத்தை நீங்களும் ஏற்று கொள்வீர்கள்.
எப்படி என்றால் திட்டமிட்டு செய்லபடுவதில் உள்ள இயல்பான சிக்கலுக்கு இந்த தளம் அழகான எளிமையான தீர்வை முன்வைக்கிறது.
தினசரி வாழ்க்கையை திட்டமிட உதவும் இணைய சேவைகள் பல இருக்கின்றன. ஆனால் திட்டமிடல் என்பது பாதி கிணறு தாண்டுவது போல தான். திட்டமிட்டதை திட்டமிட்டபடியே செய்து முடித்தால் தான் வெற்றிப்படிகளில் ஏற முடியும்.
வரிசையாக செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு அவற்றை செய்து முடிக்கும் உறுதியோ உக்கமோ இல்லாவிடில் எந்த பயனும் இல்லையே. இந்த இடத்தில் தான் அ டன் திஸ் இணையசேவை கைகொடுக்கிறது.
செய்ய நினைப்பவற்றை செய்து முடிக்க உதவுகிறது இந்த சேவை. அதிக அதிக்கம் செலுத்தாமல், அழுத்ததையும் ஏற்படுத்தாமல் எளிமையாக இதற்கு உதவுகிறது.
இந்த தளத்தில் உறுப்பினரானதுமே உங்களுக்காக ஒரு நாட்காட்டி பக்கத்தை உருவாக்கி தருகிறது. அந்த நாட்காட்டியில் நீங்கள் குறித்து வைக்க வேண்டியதில்லை. அந்த பொறுப்பை இந்த தளமே ஏற்று கொள்கிறது.
உறுப்பினரானவுடன் இன்று என்னவெல்லாம் செய்தீர்கள்? என்று கேள்வியோடு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைக்கும். அன்றைய தினம் செய்ததை எல்லாம் நினைவுபடுத்தி பதில் அனுப்பி வைத்தீர்கள் என்றால் மறுநாள் உங்கள் சார்பாக நாட்காட்டியில் அந்த செயல்களை குறித்து வைக்கும்.
இப்படியாக தினமும் மின்னஞ்சலுக்கு பதில் அளித்தீர்கள் என்றால் நாட்காட்டியில் உங்கள் செயல்கள் பதிவாகி கொண்டே இருக்கும்.
ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தீர்கள் என்றால் உங்கள் செய்லகளுக்காக டைரி போல இந்த நாட்காட்டி அமைந்திருக்கும். நீங்கள் செய்தது செய்யாதது எல்லாவற்றையும் இந்த நாட்காட்டியை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
நினைத்ததையெல்லாம் செய்து முடித்திருந்தால் இந்த நாட்காட்டி விவரங்களை பார்க்கும் போதே உற்சாகமாக இருக்கும். இல்லை என்றால் குற்ற உணர்வு வாட்டி எடுத்து முடிக்கி விடும். குறிப்பிட்ட இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும்.

விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்

விண்டோஸ் சிஸ்டத்தில் டாஸ்க்பாரை பயன்படுத்தி பல மாற்றங்களை செய்யலாம்.

டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Taskbar என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Taskbar appearance என்பதன் கீழ் நீங்கள் கீழே தரப்பட்டுள்ளதைக் காணலாம்.

1. Autohide the taskbar: இந்த பெயரிலிருந்தே இது என்ன செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்று அறியலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்டால் டாஸ்க்பாரினை நீங்கள் மாற்றவோ, சுருக்கவோ முடியாது. இடமும் மாறாது.
தவறுதலாக நீங்கள் மவுஸ் கர்சரை டாஸ்க்பாரில் வைத்து இழுத்துவிட்டுப் பின்னர் ஐயோ இடம் மாறிவிட்டதே என்ற பிரச்னை எல்லாம், இந்த டூல் மூலம் டாஸ்க்பாரை லாக் செய்துவிட்டால் வராது.
2. Use small icons: உங்கள் டெஸ்க்டொப் முழுவதும் உங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என எண்ணினால் இந்த ஆப்ஷன் உங்களுக்கு அவசியம் தேவை. இதனைக் கிளிக் செய்தால் டாஸ்க்பார், புதருக்குள் பாம்பு போல மொனிட்டருக்குக் கீழாக இருக்கும்.
டாஸ்க்பார் வழக்கமாக இருக்கும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்றால் சீறிக் கொண்டு வரும் சர்ப்பம் போல டாஸ்க்பார் எழுந்து வரும். வேடிக்கையாக இருக்கும். கர்சரை அந்த இடத்திலிருந்து எடுத்து விட்டால் உடனே டாஸ்க்பார் மறைந்துவிடும்.
உங்கள் டாஸ்க்பாரில் உள்ள ஐகான்கள் பெரிய அளவில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இதில் கிளிக் செய்திடுங்கள். ஐகான்கள் அனைத்தும் சிறியதாக மாறிவிடும்.
விண்டோஸின் எந்த பதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் டாஸ்க்பாரினை மொனிட்டரின் மற்ற இடங்களிலும் வைத்துக் கொள்ளும் ஆப்ஷன் கிடைக்கும். டாஸ்க்பாரின் மீது கர்சரை வைத்து இழுத்துச் சென்று விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
 

மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். 

நமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும். கடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்:

கடைக்காரரிடம் அவை Unlock செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் கேளுங்கள். திடமான, உறுதியான ஆனால் பாரமில்லாத மடிக்கணணிகளை தெரிவு செய்யுங்கள். கீபோர்ட்டை உபயோகித்துப் பாருங்கள். 

உங்களுக்கு அது சௌகரியமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேசை மற்றும் உங்கள் மடி மீது வைத்து இயக்கி பரிசோதித்துப் பாருங்கள். 

Pointing Device, Track Pad போன்றவற்றையும் மாற்றீடாக உள்ள மவுசைனையும் பரிசோதித்துப் பார்க்க மறக்க வேண்டாம். Track Ball, External mouse களை நீங்கள் பயன்படுத்த முடியும். 

ஆனால் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு அது உகந்ததல்ல. மடிக்கணணி பயன்பாட்டில் இருக்கும் போது அளவுக்கதிகமாக சூடாகிறதா என்று அவதானியுங்கள். 

ஒருவேளை உங்கள் மடியில் வைத்துப் பாவிப்பதாலும் இந்தப் பிரச்சினை எழக்கூடும். Screenஇன் அளவு மற்றும் Resolution போன்றவை மீதும் கவனத்தை செலுத்துங்கள். தற்போதைய LCD Screen கள் 13 முதல் 21 இஞ்ச் அளவுகளில் கிடைக்கின்றன.

Screen Resolution மிகக் குறைந்தது 800-600 pixels முதல் 1600-1200 pixels வரை இருக்கக்கூடும். பலதரப்பட்ட Settingsகளை செய்து Screenஐப் பார்வையிடுங்கள். 

சாதாரண அறையினுடைய வெளிச்சத்தில் நன்றாகத் தெரியக்கூடிய Settings அதிக வெளிச்சம் அல்லது குறைந்த வெளிச்சத்தில் மிக மோசமாகத் தெரியக்கூடும்.

USB2 மற்றும் Fire wire Connection இருக்கக்கூடிய மடிக்கணணிகளைத் தெரிவு செய்யுங்கள். இவை iPods, Digital iPods, Digital கமெராக்கள் மற்றும் சில கைத்தொலைபேசிகளை இணைக்க செய்வதற்கு பயன்படுகின்றன.

இணைய இணைப்புகளைப் பெறுவதற்கு வயர்களைப் பயன்படுத்துவதை விட Wireless Network Card பயன்படுத்தலாம். Bluetooth இணைப்பு இருப்பின் அதுவும் சிறந்தது தான். DVD Burner உள்ளதா என்பதையும் அவதானியுங்கள்