LAC இன் ஓர் புதிய Smartphone அறிமுகம் !

இந்திய நிறுவனமான லக்சுமி அக்ஸஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இணையதள தலைப்புச் செய்திகளில் வர ஆரம்பித்திருக்கிறது. அதாவது அதன் புதிய டேப்லெட்டைப் பற்றிய அறிக்கை இணையதளங்களை ஈர்த்திருக்கிறது.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு புதிய ஸ்மார்ட் போனை எஸ்சிஎஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அது உண்மையாகவே இந்தியாவில் நல்ல பெயரைப் பெற்றது. இப்போது எல்சிஎஸ் தயாரிக்கும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.

இந்த புதிய எல்எசிஎஸ் மேக்னம் மிர்ச்சி-5 வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த எல்எசிஎஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் கம்ப்யூட்டாரன இது மலிவு விலையில் கிடைக்கும்.

புதிய எல்எசிஎஸ் மேக்னம் மிர்ச்சி-5 டேப்லெட் 5இஞ்ச் கொண்ட திரையுடன் வருகிறது. மேலும் இதன் சிபியு 1ஜிஹச்ஸட் வேகத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு ஆண்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.

இதன் இன்டர்னல் சேமிப்பு அளவைப் பார்த்தால் அது 512 எம்பி ஆகும். மேலும் இது 512 எம்பி ரேமையும் கொண்டுள்ளது. 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் விஜிஎ முகப்பு கேமார கொண்டு இந்த மொபைல் அமர்க்களப்படுத்துகிறது. முகப்பு கேமரா இருப்பதால் வீடியோ காலுக்கு பிரச்சினை இல்லை.

இதனுயை 5 இஞ்ச் டிஸ்பிளே இதற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதனால் இதன் டிஸ்ப்ளே 800 X 480 பிக்ஸல் தெளிவைத் தருகிறது. புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 மற்ற ஆண்ட்ராய்டு போன்களைப் போலவே எல்லா வசதிகளையும் கொண்டிருக்கிறது.

புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 இன்டக்ரேட்டட் எப்எம் ரேடியாவுடன் ஆட்டோ சுழற்சிக்காக லைட் சென்ஸார், இகம்பாஸ் மற்றும் அக்ஸிலர்மீட்டர் போன்ற வசதிகளை வழங்குகிறது. ப்ளூடூத், வைபை மற்றும் ஹச்எஸ்பிஎ தொடர்பு வசிதிகளும் இந்த போனை அலங்கரிக்கின்றன. மற்ற ஆண்ட்ராட்டு போன்களோடு புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 கண்டிப்பாக போட்டிபோட வேண்டியிருக்கும்.

குறிப்பாக எல்ஜி ஆப்டிமஸ் ஒன் அன் ப்ளாக், ஹச்டிசி சாசா, மைக்ரோமேக்ஸ் எ60 சாம்சுங் காலக்ஸி எஸ் மற்றும் ஸ்பைஸ் எம்-410 போன்ற போன்களோடு கடும் போட்டி போட வேண்டியிருக்கும். இருந்தாலம் புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 அனைத்துப் போட்டிகளையும் சமாளித்துவிடும் என நம்பலாம். இதன் விலை ரூ.20,000மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The home grown company in India, Lakshmi Access Communication Systems will soon launch its high end Android smart phone, LACS Magnum Mirchi 5. The launch is scheduled for someday in September in India. LACS Magnum Mirchi comes with a 5 inch display screen, which is somewhat similar to the much respected Dell Streak. The processor is a very powerful one in the device with the CPU having a clock speed of 1GHz.The Android support in the phone will be an Android 2.3 Gingerbread. The phone will have internal memory storage of a 512 MB. RAM capacity is again a 512 MB for the device. The device will come with a stunning 5Mega Pixel camera attached to its rear in addition to the VGA camera provided in the front. The VGA camera thus makes it possible to make video calls from the phone. It will offer the users a quality display with superb picture clarity of 800 X 480 pixels. LACS intend to present their mobile at a price range of RS 20000 in the Indian markets.

வைரக்கிரகம் கண்டுபிடிப்பு ( கிரிஸ்டல் கிரகம் ) - Diamond Planet

சிட்னி: வைரத்தால் ஆன ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மாபெரும் நட்சத்திரங்கள் தங்களது எரி சக்தி அனைத்தையும் இழந்து, சுருங்கும்போது பல்ஸார்கள் எனப்படும் ஒலியை வெளிப்படுத்தும் சிறிய நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறும். இந்த பல்ஸார்கள் பெரும்பாலும் தனித்தே காணப்படும்.

சில நேரங்களில் கிரகங்களுடன் கூடிய சில பல்ஸார்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பகுதியில் உள்ள பார்க்ஸ் ரேடியோ டெலஸ்கோப் விண்வெளி ஆய்வு மையத்தை் சேர்ந்த விஞ்ஞானிகள், புதிய பல்ஸார் ஒன்றை கண்டுபிடித்தனர். இதற்கு PSR J1719-1438 என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 4,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் இந்த பல்ஸார் நட்சத்திரத்தைச் ஒரு கிரகமும் சுற்றி வருகிறது.

இது போன்ற கிரகங்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் அல்லது ஹீலியத்தால் ஆனவையாக வெறும் வாயு கிரகங்களாக இருக்கும்.

ஆனால், இந்த கிரகம் கார்பன், ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அழுத்தமும், நிறையும் நினைக்க முடியாத அளவுக்கு மிக மிக அதிகமாக உள்ளதால், அங்குள்ள கார்பன் இறுகி வைரம் அல்லது கிரிஸ்டல் போன்ற நிலையில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதனால் அந்த கிரகமே, இதுவரை நாம் கற்பனை செய்து பார்த்திராக வகையில் வைரம் அல்லது கிரிஸ்டல்களாக ஜொலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த கிரகம் அந்த பல்ஸாரை சுற்றி வருவதோடு, ஒரு நிமிடத்துக்கு நூற்றுக்கும் அதிகமான முறை தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் உள்ளது. இது 60,000 கி.மீ. விட்டம் (diameter) கொண்டுள்ளது.

English summary
Scientists discovered a planet 20 times denser than Jupiter that they say has the chemical composition, pressure and dimensions to suggest a crystalline, or diamond, makeup. The planet’s density implies it’s made of carbon and oxygen, rather than hydrogen and helium, which are the main components of gaseous planets like Jupiter, according to a report published online yesterday by the journal Science.

உங்கள் கடந்த காலத்தை பார்க்க ஓர் Website !

பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் விவ‌ரங்களை உங்கள் வாழ்க்கை கல்வெட்டுக்கள் என்று எப்போதேனும் நினைத்ததுண்டா? அப்படி நினைக்க வைக்ககூடிய அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
பாஸ்ட் போஸ்ட்ஸ் என்னும் அந்த தளம் பேஸ்புக் மூலம் உங்கள் க‌டந்த காலத்தை திரும்பி பார்க்க உதவுகிறது. அதாவது சென்ற வருடம் இந்த நாளில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நினைத்து பார்க்க வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ்.
வரலாற்றில் இன்று என்று சில நாளிதழ்களும் தொலைகாட்சிகளும் கடந்த கால நிகழ்வுகளை தொகுத்தளிக்கின்றன‌ இல்லையா, அதே போல உங்கள் வாழ்க்கையிலும் கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை திரும்பி பார்க்க நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த தளம்.
கடந்த ஆண்டு இதே நாளில் என்ன செய்தீர்கள் என்று நினைவில் உள்ளதா என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலை சுவாரஸ்யமான வழியில் முன்வைக்கிற‌து இந்த தளம்.
பேஸ்புக் பயனாளிகள் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும் செயல்களையும் பேஸ்புக் சுவர் வழி செய்திகளாக பகிர்ந்து கொள்கின்றனர் அல்லவா? இவற்றை ஒருவரது வாழ்க்கை பதிவின் கல்வெட்டுக்களாக கருதி தினம் ஒரு செய்தியாக மின்னஞ்சல் மூலம் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ். (http://pastposts.com/)

இந்த தளத்தில் உறுப்பினரான பின் ஒருவரது பேஸ்புக் சுவர் பதிவுகளில் இருந்து கடத்த கால பதிவுகளில் இருந்து கடந்த ஆண்டு அதே நாளில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் தேர்வு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகிற‌து.
பேஸ்புக்கில் எல்லோரும் பகிர்ந்து கொள்கின்ற‌னரே தவிர அந்த பதிவுகளை பலரும் திரும்பி பார்ப்பதில்லை. அந்த வசதியை தான் புதுமையான முறையில் இந்த தளம் வழங்குகிறது. 

இந்த தளம் மூலம் கடந்த ஆண்டு இதே நாளில் என்ன செய்து கொண்டிருந்தோம் என அறிந்து கொள்ள முடிவது பயனாளிகளுக்கு புதிய அனுபவமாகவே இருக்கும். டைரியை புரட்டி பார்ப்பது போல பேஸ்புக் வழியே தங்கள் வாழ்க்கை பிளேஷ்பேக்கில் மூழ்கலாம். 

பேஸ்புக் அனுபவத்தை மேலும் பட்டை தீட்டும் வகையில் பேஸ்புக் சார்ந்து பல்வேறு தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகவும் சுவாரஸ்யமானதாக இதனை கருதலாம். 

பேஸ்புக்கின் செல்வாக்கை மீறி அதன் பயன்பாடு குறித்து பல்வேறு விமர்சன‌ங்களும் இருக்கின்றன. ஆனால் பேஸ்புக் வெறும் பொழுதுபோக்கு அல்ல என்பதை இது போன்ற தளங்கள் உணர்த்தி வருகின்ற‌ன.

செப். 8 முதல் இலங்கையின் அவசர காலச்சட்டம் Bye Bye!

கொழும்பு: கடந்த 30 வருடங்களாக அவசர நிலைச் சட்டத்தின் பிடியில் இருந்து வந்த இலங்கை, செப்டம்பர் 8ம் தேதி முதல் அந்த சட்டத்திலிருந்து வெளி வருகிறது.

இதை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அறிவித்தார். அவர் கூறுகையில், இனியும் அவசர நிலையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தற்போதைய அவசர நிலைச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றார். செப்டம்பர் 8ம் தேதியுடன் தற்போதைய அவசர நிலை முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் அது நீட்டிக்கப்படாது என்று ராஜபக்சே கூறி விட்டதால், 30 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு வந்த அவசர நிலை முடிவுக்கு வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக மாதா மாதம் அவசர நிலையை இந்த நாடு நீட்டித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் இத்தனை காலமாக போரில் ஈடுபட்டு வந்த இலங்கை அரசு மற்றும் படைகளால் அவர்களை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறி வந்தனர். ராஜபக்சே அதிபர் பதவிக்கு வந்த பிறகு பலநாட்டு உதவிகள் கிடைத்ததைத் தொடர்ந்துதான் அவர்களால் புலிகளை எதிர்க்கவே ஒரளவுக்கு தெம்பு கிடைத்தது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்துடன் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக அறிவித்தார் ராஜபக்சே. ஆனால் அவசர நிலையை மட்டும் அவர் விலக்கவில்லை. மாறாக நிலைமை சரியானதும் விலக்கப்படு்ம் என்று கூறி வந்தார்.

தற்போது இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் மிகப் பெரிய நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைகள் நடத்திய கொடூரத்தனம், அயோக்கியத்தனம், மனிதாபிமானற்ற கொடுஞ்செயல்கள் உலகம் முழுவதும் அம்பலமாகி விட்டது. இதனால் இலங்கைக்கு எதிராக நாலா புறமும் பல்வேறு நாடுகள் நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்துள்ளன. அதிலிருந்து தப்பிக்கும் வழிகளில் ஒன்றாகவே நெருக்கடி கால சட்டத்தை முடித்துக் கொள்ள ராஜபக்சே முயல்வதாக தெரிகிறது. இதன் மூலம் மனித உரிமைகளை தாங்கள் மதிப்பதாக வெளியுலகுக்குக் காட்டிக் கொள்ளலாம் என்பது ராஜபக்சே மற்றும் அவரது குழுவினரின் நினைப்பு.

ராஜபக்சேவின் இந்த முடிவுக்கு இலங்கை எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆனால் கூடவே 'கொட்டும்' வைத்துள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சி் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறுகையில், இந்த முடிவை வரவேற்கிறேன். ஆனால் போர் முடிந்ததும், 2009ம் ஆண்டிலேயே இதை ராஜபக்சே செய்திருக்க வேண்டும். இப்போது அறிவித்திருப்பது மிகவும் கால தாமதமான முடிவு.

அடுத்து தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வையும், மனித உரிமைத் தேவைகளையும் அரசு செய்ய வேண்டும் என்றார் அவர்.


English summary
Sri Lanka will end emergency from September 8. This was announced by Rajapakse in SL Parliament yesterday. The emergency was in place for the last 30 years. Leader of the Opposition Ranil Wickremesinghe welcomed the decision. He pointed out that the government could have withdrawn the emergency in May 2009 itself after it eliminated the Tigers. He felt a lot more had to be done to restore democracy and evolve a political solution.

90 வயது மூதாட்டியை தீயில் இருந்து காப்பாற்றிய Titanic heroine Kate Winslet !

London : தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டில் இருந்து 90 வயது மூதாட்டியை டைட்டானிக் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் காப்பாற்றினார்.

பிரபல ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட்(35). இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன்(61). அவருக்கு நெக்கர் தீவில் சொகுசு மாளிகை உள்ளது. அந்த மாளிகையில் விடுமுறையைக் கழிக்க கேட், அவரது காதலர் லூயி டவ்லர், 2 குழந்தைகள் உள்பட 20 பேர் தங்கினர்.

அந்த சொகுசு மாளிக்கைகு அருகில் உள்ள கட்டிடத்தில் பிரான்சன் தன் மனைவி மற்றும் மகன் சாமுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு கேட் தங்கியிருந்த மாளிகையை மின்னல் தாக்கியதால திடீர் என்று தீ பிடித்தது. உடனே மாளிகையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

அப்போது அங்கிருந்து பிரான்சனின் 90 வயது தாயை கேட் லாவகமாகத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

இது குறித்து பிரான்சன் கூறுகையில்,

நான் கேட் வின்ஸ்லெட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தான் எனது தாயை மாளிகையில் இருந்து வெளியே கொண்டு வந்தார். என் தாய்க்கு 90 வயது ஆகிறது. அவரால் நடக்க முடியும். இருப்பினும் தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்ததால் கேட் அவரை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார் என்றார்.

எரிந்து போன அந்த மாளிகையை பிரான்சன் தன் 28-வது வயதில் ரூ. 1 கோடியே 35 லட்சத்து 58 ஆயிரத்து 162-க்கு வாங்கினார். விரைவில் மாளிகையைப் புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த பிரான்சன் தான் வெர்ஜின் குரூப்பின் தலைவர் ஆவார்.





English summary
Titanic heroine Kate Winslet has become real life heroine by saving the 90-year old mother of the British business tycoon Richard Branson from fire. Kate and 20 others stayed in a bungalow of Branson in Necker island. Lightning struck the house and it caught fire at 4 am on august 22. While others ran for their life, Kate, who was there with her children, just carried the old woman in her arms.

Asus New Styler Laptop - ஒரு பார்வை

Asus New Styler Laptop
விற்பனையில் ஆசஸ் ட்ரான்பார்மர் டேப்லெட் உலக அளவில் ஒரு பெரிய சாதனையை புரிந்தது. அதே சாதனையை எதிர்நோக்கி ஆசஸ் நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. 
இந்த புதிய டேப்லெட்டைப் பற்றி ஏராளமான செய்திகள் இணையதளத்தில் உலா வருகின்றன. ஆசஸ்நிறுவனம் இந்த புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் முதன்முதலாக ஸ்லைடர் கீபோர்டு கொண்ட டேப்லெட்டை சந்தையில் அறிமுகப்படுத்தப் போகிறது. 
ஸ்லைடர் கீபோர்டுடன் வருவதால் இந்தடேப்லெட்டின் விலையும் சற்று கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தங்களுடைய நெட்புக்கை மாற்ற விரும்புவோர் இந்த புதிய டேப்லெட்டை கண்டிப்பாக வாங்கலாம்.

இந்த புதிய ஸ்லைடர் டேப்லெட் ஆசஸின் ட்ரான்ஸ்பார்மர் பாட் டேப்லெட்டைப் போல் 10.1 இன்ச் அளவு எல்சிடி ட்ஸ்பிளே திரையுடன் 800 X 1280 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டுள்ளது. அதனால் இதன் திரை பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

ஆசஸ் இஇஇ பாட் ஸ்லைடர் கிவெர்ட்டி கீபோர்டைக் கொண்டிருந்தாலும் இதில் ட்ராக் பாட் இல்லாதது சிறிய குறையாகத் தெரிகிறது. யுஎஸ்பி போர்ட் இன்டர்னல் மவுசுடன் எளிதில் தொடர்புகொள்ளக்கூடிய அளவில் உள்ளதால் தொடுதிரையிலிருந்து கீபோர்டுக்கு தகவல்களைப் பரிமாற்றும் சலிப்பான வேலை இருக்காது.

இதனுடைய ஓஎஸ் வி3.1 அளவு அப்க்ரேட் செய்யும் வகையில் ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் 3.0ஐ பெற்றுள்ளது. இதனுடைய நிவிடியா டெக்ரா 2 டூவல் கோர் ப்ராஸஸர் இதில் வேலை செய்யும் பொழுது ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

மேலும் இதன் இன்டர்பேஸ் 1ஜிபி ராமைக் கொண்டிருக்கிறது. சிறந்த வீடியோ படங்களை எடுக்கும் அளவிற்கு 5எம்பி கேமராவை வழங்குகிறது. அதே போல் முகப்பில் விஜிஎ கேமராவைக் கொண்டிருப்பதால் தரமான வீடியோ சாட்டிங் மற்றும் காலிங் செய்யலாம்.

தொடர்பு வசதிகளைப் பார்க்கும் போது இது சிறிய எச்டிஎம்ஐயுடன் யுஎஸ்பி போர்ட் மற்றும் வைஃபை மற்றும் ப்ளூடூத் போன்ற தகவல் பரிமாற்ற வசதிகளை கொண்டுள்ளது. மேலும் ஆசஸ்இஇஇ பாட் ஸ்லைடர் 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய 16ஜிபி இன்பில்ட் மெமரியைக் கொண்டிருக்கிறது.

வரும் கோடையில் சில நாடுகளில் இதை அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். இந்தியாவில் ஆசஸ்இஇஇ பாட் ஸ்லைடர் எப்பொழுது அறிமுகமாகும் என்று தெரியாவிட்டாலும் இதன் விலை ரூ.35,000மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Asus Eee Pad Transformer has proved to be an awesome one with its record breaking sales all over the world. Expecting similar smash record sales, Asus has announced the expected release date of their new innovation, the new Asus Eee Pad Slider. The new slider tablet will have a 10.1 inch LCD display screen with an 800 X 1280 pixel resolution which was exactly the specification of the previous tablet version of Asus, the Transformer Pad.The OS of the tablet is certainly an Android Honeycomb 3.0 and it’s expected to get an upgrade very soon to a v3.1. The tab has a 1GB RAM too. Other characteristic features include a 5MP camera provided in the rear which can capture superior quality pictures and videos. The enhanced connectivity specifications in the Asus Eee Pad Slider Model consists of a USB 2.0 with a mini HDMI, an efficient Wi-Fi and Bluetooth devices. It’s estimated to cost about RS. 35000 in India.

2013 ஆம் ஆண்டுக்குள் உலகம் அழியும் ஆபத்து !

நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் 2010, மார்ச் 30 அன்று சூரியனிலிருந்து வெளிப்பட்ட பெரும் வெப்பத்தீற்றலை காட்டுகிறது.

சூரியன் தனது ஆழ்தூக்கத்திலிருந்து விழித்து வருவதாக குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், வருகிற 2013 ஆம் ஆண்டுக்குள் உலகின் தொலைதொடர்பு மற்றும் மின்சக்தி கட்டமைப்புகளை ஸ்தம்பிக்கச் செய்யும் மிகப்பெரும் வான்வெளி புயல்கள் ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர். 

 
சூரிய செயல்பாடுகளில் அதிக மற்றும் குறைந்த விசை கொண்ட ஒரு பதினொரு வருட சுழற்சி முறையில் இயங்கி வரும் நமது சூரியன் தற்போதுதான் அது ஒரு குறிப்பிடத்தகுந்த அமைதியான நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நகர்வதாக கூறுகின்றனர்.  அதில் கத்ரீனா புயலை விட இருபது மடங்கு பொருளாதார நஷ்டத்தை உருவாக்க வல்ல 100 ஹைட்ரஜன் குண்டுகளின் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஆக்ரோஷமான பெரும் வெடிப்புகள் சூரியனில் ஏற்படும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

தீவிரமான ஒரு சூரிய (மின்காந்த) புயலில் பெரும் மின்சேமிப்பு காலங்கள், செயற்கைக்கோள் திசையறிதல், விமானப் பயணங்கள், பணப்பரிமாற்றங்கள் மற்றும் அவசர கால் ரேடியோ தொடர்புகள் கூட முழுவதுமாக பாதிக்கப்படும்.


2013ஆம்  ஆண்டு வாக்கில் சூரியனிலிருந்து வர இருக்கும் ஆக்ரோஷமான விசிறல்கள் மற்றும் அதன் பாதிப்புகளிளிருந்தும் பூமியை பாதுகாப்பது பற்றிய சாத்தியங்களை ஆராய வாஷிங்டனில்    சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கூடி ஆலோசனை செய்தனர். இந்த விண்வெளி மாநாட்டில் விஞ்ஞானிகள், அரசுகளின் கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நாசா பல்வேறு செயற்கை கோள்களை பயன்படுத்தி வருகிறது.


தேசிய அறிவியல் மையம் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இத்தகைய பெரும் விண்வெளி நிகழ்வுகள் சமூக பொருளாதார நிலைகளின் மீது தாக்கம் ஏற்படுவதைப் பற்றிய பிரச்சனையை ஆய்வுக்கு கொண்டு வந்தது. ஆனால், இந்த சூரிய புயல் எப்போது நம்மை சமீபிக்கும்  என்று முன்பே அறிய முடிந்தால் பாதிப்புகளை பெருமளவு தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


SAFE MODE இல் செயற்கை கோள்களை இருக்க வைப்பது, மின்கலங்களை தொடர்பிலிருந்து அகற்றி வைப்பது போன்றவற்றின் மூலம் மின்தாக்குதல்களை தவிர்க்கலாம் என்று இவர்கள் யோசனை கூறுகின்றனர்.


இவற்றில் மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் - அமெரிக்க தேசிய கடல் மற்றும் வான்வெளி கழகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கழகம் நாசாவுடன் இணைந்து சேதத்தைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபடும்.

இணையத்தில் வீடியோக்களை பல வடிவங்களில் தரவிறக்க ஒரு தளம் - WebVideoFetcher

இணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய பார்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை. FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற இணையதளங்களில் காணப்படும். தரவிறக்கி முடிந்தவுடன் மறுபடியும் அந்த வீடியோவை நமக்கு வேண்டிய பார்மேட்டில் மாற்ற வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ளும். தரவிறக்கும் போதே வேண்டிய பார்மேட்டில் தரவிறக்கம் செய்ய பல மென்பொருள்களும் கிடைக்கின்றன.

இணையத்தில் இதற்கு ஒரு வழியும் இருக்கிறது. WebVideoFetcher என்ற இந்த இணையதளம் கூகிள், பேஸ்புக், யூடியுப் (Google, YouTube, Facebook) போன்ற வீடியோ தளங்களிலிருந்து நேரடியாக நமது கணிணிக்கு வீடியோக்களைத் தரவிறக்க உதவுகிறது. நீங்கள் எதேனும் இணையதளங்களில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது பிடித்திருந்தால் அதன் இணைய முகவரியை காப்பி செய்து இந்த தளத்தில் இட்டு Download என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும்.
இந்த தளத்தின் மூலமே FLV, AVI, Mp4, Mp3, AAC போன்ற வகைகளில் குறிப்பிட்ட வீடியோவை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் வீடியோக்களை Low Quality, Medium, High Quality போன்ற தர அளவுகளில் தரவிறக்கம் செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பாகும். ஆடியோ வகைகளிலும் இந்த தர நிர்ணயம் இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ஒத்து வருகிற தரவிறக்க அளவுக்கேற்ப
(Download size) பெற முடியும்.

இணைய முகவரி : http://www.webvideofetcher.com

இந்த இணையதளத்தின் சேவையைப் பயன்படுத்த உங்கள் கணிணியில் ஜாவா வசதி அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கீழே கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
http://www.java.com/en/download/

Yahooவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை Onlineல் பார்க்க

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூகிள் தனது ஆன்லைன் வீடியோ தளமான யூடியுபில் (YouTube) புதிய இந்தித் திரைப்படங்களை முழுதும் பார்த்து ரசிக்கும்படி Box Office என்ற புதிய சேனலை அறிமுகப்படுத்தியது. 

யூடியுபில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப் படங்கள் இருந்தாலும் புதிய ஹிட் படங்களை மாதமொரு முறை ஒவ்வொன்றாகப் பார்க்கும் படி கொண்டு வந்தது. மற்றொரு பிரபல தளமான யாகூவும் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்வது என்று கூகிளின் சேவையைப் பின்பற்றி ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

யாகூவின் இந்த புதிய சேவை
MoviePlex என்று அழைக்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் முழுநீள பாலிவுட் இந்தித் திரைப்படங்களை உங்கள் கணிணியில் எப்போதும் எங்கேயும் பார்த்துக் கொள்ள முடியும். கூகிளின் Box-office இல் மாதத்திற்கு ஒரு புதிய படத்தை மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் இதில் தரவேற்றப்பட்ட எல்லாப் படங்களையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தற்போது 8 திரைப்படங்களைத் தரவேற்றியிருக்கிறார்கள். 

மேலும் பல படங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. ஆனால் இதில் உள்ள குறை என்னவென்றால் இதில் இணைக்கப்படும் திரைப்படங்கள் Standard Version இல் இருப்பதால் பிளாஷ் வசதி இல்லாத கருவிகளில் பார்க்க இயலாது என்பதே. ஐபேடு மற்றும் சில மொபைல்களில் பிளாஷ் வசதி இருப்பதில்லை. கணிணியில் பார்ப்பதற்கு சிக்கல் ஏதும் இல்லை. 

HTC ChaCha மற்றும் LG Gelato - ஒரு ஒப்பீடு

எச்டிசி சச்சாவை ஒரு பேஸ்புக் மொபைல் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் உள்ள ஒரு பட்டனை அழுத்தியவுடன் நாம் பேஸ்புக்கில் எளிதாக நுழைந்து விடலாம். ஆனால் எல்ஜி கிலட்டோவில் பேஸ்புக் வசதி இல்லாவிட்டாலும் பல சமூக வலைதளங்களுக்குள் செல்லும் வசதிகளை வழங்குகிறது.

சோஷியல் நெட்வொர்க்கிங்கை எளிதாக செய்ய வேண்டும் என்பதற்காகவே எச்டிசி சச்சா தொடுதிரை வசதியையும் கிவெர்ட்டி கீபோர்டும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரத்யேக பட்டன் மூலம் வீடியோ தொகுப்பை பேஸ்புக்கில் அப்லோட் செய்யலாம். 

ஆனால் எல்ஜி கிலட்டோவை பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லையென்றாலும் அதைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையதளத்தில் வருகின்றன. இதன்படி, எல்ஜி கிலட்டோ ஒரு ஆண்ட்ராய்டு மொபைலாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இது வேரிஸான் வயர்லஸ் நெட்வார்க்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்டிசி சச்சா 2G/3G நெட்வொர்க் சப்போர்ட்டுடன் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரீடு ஓஎஸ் வி2.3ஐ கொண்டிருக்கிறது. மேலும் இது 114.4 X 64.6 X 10.7எம்எம் பார் டைமன்சனுடன் 120 கிராம் எடையுடன் உள்ளது. அதே நேரத்தில் எல்ஜி கிலட்டோ 4.5 X 2.3 X 58 டைமன்சனைக் கொண்டிருக்கிறது.

மேலும் இது 3.2 இன்ச் அளவு டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் 320 X 240 பிக்ஸல் ரிசலூஷனைக் கொண்டிருக்கிறது. ஆனால் எச்டிசி சச்சா 2.6 இஞ்ச் டிஎப்டி தொடுதிரையுடன் 256கே வண்ணங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது சக்தி வாய்ந்த 600 மெகாஹெர்ட்ஸ் ப்ராஸஸரையும் கொண்டிருக்கிறது.

எச்டிசி சச்சா ஆட்டோபோக்கஸ், எல்இடி ப்ளாஷ் கொண்ட ஆற்றல் வாய்ந்த 5 மெகா பிக்ஸல் கேமராவைப் பெற்றிருக்கிறது. மேலும் முகப்பு விஜிஏ கேமராவையும் கொண்டிருப்பதால் லைவ் சாட்டிங் செய்ய மிகவும் எளிதாக இருக்கும்.

அதே போல் எல்ஜி கிலட்டோவும் ஆட்டோபோக்கஸ் மற்றும் 2048 X 1536 பிக்ஸல் கொண்ட 3.2 மெகா கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் கேம் காடர் 3எக்ஸ் சூம் வசதியைக் கொண்டிருப்பதால் படங்களை எடிட் செய்வது எளிதாக இருக்கும்.

தொடர்பு வசதிகளைப் பார்த்தால் எச்டிசி சச்சா நவீன ப்ளூடூத் வி2.1 மற்றும் எ2டிபியைக் கொண்டிருக்கிறது. எல்ஜி கிலட்டோ மேற்சொன்ன அதே வசதிகளுடன் மைக்ரோ யுஎஸ்பி வசதியையும் கொண்டுள்ளது. மேலும் இது 802.11 பி/ஜி/என் வைபை வசதியையும் பெற்றிருக்கிறது. இரண்டு மொபைல்களுமே ஆன்லைன் வசதிக்காக இடிஜிஇ சப்போர்ட்டுடன் ஜிபிஆர்எஸ் கொண்டுள்ளன.

எச்டிசி சச்சா ஏற்கனவே ரூ.14,999க்கு சந்தையில் கிடைக்கிறது. ஆனாம் எல்ஜி கிலட்டோவின் விலை பற்றி இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை.


English summary
HTC ChaCha comes with a single touch to Facebook button. LG Gelato meanwhile is not Facebook addicted, but still offers variant services in social networking and demonstrates new attitudes of refined wireless communication. The phone will feature an android OS v2.3 Gingerbread with 2G/3G network supports. The design of the phone is predicted as a bar with dimensions 114.4 X 64.6 X 10.7 mm and weighs about 120 gram. LG Gelato at the same time is a 4.5 X 2.3 X 58.The phone will have a TFT Capacitive touch screen and has a size of 3.2 inch and with a resolution of 320 X 240 pixels. HTC ChaCha has a 5 Mega Pixel camera in its rear with a 2592 X 1944 pixels included with an autofocus LED flash. It has a VGA camera in the front enabling Live Chatting option. The camera in LG Gelato is 3.2 Mega pixels, with a resolution of 2048 X 1536 pixels. The autofocus feature is present here too. HTC ChaCha is already available in all the leading mobile shops with an estimated price tag of Rs 14999/-.The price details of LG Gelato is not revealed yet.

விண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா!

மாஸ்கோ: விண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 

இந்த விண்வெளி ஹோட்டலுக்கு தி கமர்ஷியல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது ரஷ்யா. இந்த ஹோட்டல் வரும் 2016-ம் ஆண்டு திறக்கப்படும். பூமியில் இருந்து சுமார் 217 மைல் தொலைவில் மிதக்கும் இந்த ஹோட்டலில் 4 அறைகள் இருக்கும். அதில் 7 பேர் வரை தங்கலாம்.

விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கும் வகையில் அதில் வசதி செய்யப்படும். இந்த ஹோட்டலில் 5 நாட்கள் தங்க ரூ. 2 கோடியே 61 லட்சத்து 94 ஆயிரத்து 154 செலவாகும்.

இந்த விண்வெளி ஹோட்டலுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் சோயூஸ் ராக்கெட் மூலம் அங்கு செல்ல வேண்டும். இந்த ஹோட்டல் சர்வதேச விண்வெளி மையத்தை விட வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ருசியான, வகை வகையான உணவுப் பொருட்களை எதிர்பார்க்க முடியாது.

பூமியில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்து கொடுக்கப்படும். மது பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் பணி புரியும் விஞ்ஞானிகள் தங்கள் அவசரத் தேவைக்கு இந்த ஹோட்டலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆர்பிடல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் தான் இந்த ஹோட்டலை நிர்மானித்து வருகிறது.

இது குறித்து ஆர்பிடல் டெக்னாலஜீஸின் தலைவர் செர்கீ காஸ்டென்கோ கூறுகையில்,

விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கலாம். பணக்காரர்கள் மற்றும் விண்வெளியில் ஆய்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன ஊழியர்களை மனதில் வைத்து தான் இந்த ஹோட்டல் அமைக்கப்படுகிறது என்றார்.


English summary
Russia has announced a hotel in space named the commercial space station. It will be opened in 2016 and a 5 day stay costs Rs. 26, 194, 154 only. Orbital Technologies is building this hotel which will be more comfortable than the international space station.

Facebook இல் நிகழவிருக்கும் ஆப்பு !

பிரபல Facebook சமூகவலைத்தளத்தை, எதிர்வரும் நவம்பர் ஐந்தாம் திகதி, கொன்றழிக்க போவதாக, இனந்தெரியாத ஹேக்கிங் குழு ஒன்று சபதம் எடுத்துள்ளது. YouTube மூலமாக விடுக்கப்பட்ட இச்சபதத்தில்…, 

 உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த, நடுத்தர தொலைத்தொடர்பு சேவையான Facebook விரைவில் அழியப்பட்டுவிடும். 

உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நீங்களும் Facebook அழிக்கும் எமது முயற்சிக்கு கைகொடுக்கலாம் என அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  ’operation Facebook’ என பெயரிடப்பட்டுள்ள இத்தாக்குதல் நடவடிக்கை நவம்பர் 5ம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது என அவர்கள் கூறியுள்ளனர்.  

கடந்த வாரம் பேஸ்புக்கிற்கு பெரும் தலையிடி கொடுத்து வந்த ஸ்பாம் மன்னர் நியூயோர்க் மெட்ரோபோலியன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் அமெரிக்க போலிஸ் ஏஜென்ஸிக்களின் இணையத்தளங்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கு Antisek எனும் ஹேக்கிங் குழுவினர் அண்மையில் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சில நொடிகளில் உங்கள் புகைப்படத்தை விதவிதமாக வடிவமைக்க ஒரு இனிய தளம்…

நம் அனைவருக்குமே நம்முடைய புகைப்படங்களை விதவிதமாக வடிவமைத்து பார்க்க ஆசை இருக்கும். 

Facebook, Orkut, Twitter போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் முகப்பு படங்களாக சில நண்பர்கள் விதவிதமான வடிவமைப்பில் தங்கள் படத்தினை போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மாதிரி நீங்களும் உங்கள் படத்தை வடிவமைத்து மகிழலாம். 

இதற்காக பல வலைத்தளங்கள் இருந்தாலும் அதில் ஒரு இனிய தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பினை சொடுக்கினால் அங்கே நீங்கள் விரும்பிய வண்ணம் உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து மாற்றிக்கொள்ளலாம் 

விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு (new) !

விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் பறந்து ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. அது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது.   அதற்கு “ட்ரெஸ்-2 பி” என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்னர்.
இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. அதன் மீது சூரியனின் 1 சதவீத வெளிச்சம் மட்டுமே விழுகிறது. இதனால் இந்த கிரகம் கரியைவிட மிகவும் கறுப்பு நிறத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பில் பல “கியாஸ்” பிரதிபலிக்கின்றன.
வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது.  
ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை. என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இந்த கிரகம் கடும் வெப்பமாக உள்ளது. இங்கு 1800 டிகிரி பாரன்கீட் வெப்பம் நிலவுகிறது. அதிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்கள் மங்கலான சிவப்பு கதிர்களாக தெரிகிறது. ட்ரெஸ்- 2 பி கிரகம் குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்களின் மார்பகங்களை கடிக்கும் கிறிஸ் பூதங்கள்! (Sri Lanka)

இலங்கையின் கிறிஸ் பூதங்கள் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனம் இன்று செய்தி பிரசுரித்து உள்ளது.கிறிஸ் பூதங்களின் இரவு நேர அட்டகாசங்களால் நாடு பூராவும் பதற்றம் நிலவுகின்றது என இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கிறிஸ் பூதங்கள் ஏற்படுத்திய குழப்பங்களால் இவ்வாரம் குறைந்தது மூன்று மரணங்கள் நேர்ந்து உள்ளன.பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆண்கள் ஆயுதங்களுடன் காவல் காக்கின்றனர்.
 
கள்வர்கள் ஜட்டி மாத்திரம் அணிந்து கொண்டு உடல் முழுவதும் தாரைப் பூசிக் கொண்டு இரவு நேரங்களில் களவுக்கு போன காலம் இருந்தது.எவரும் அடையாளம் காணக் கூடாது என்பதற்காகவே உடல் முழுவதும் தார் பூசிக் கொண்டார்கள். இத்திருடர்கள்தான் கிறிஸ் பூதங்கள் என்று முதலில் அழைக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்ற கிறிஸ் பூதங்கள் பெண்களை பயமுறுத்துகின்றனர். பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்துகின்றனர். பெண்களின் கழுத்து, மார்பக முலைகள் ஆகியவற்றின் மீது பாய்ந்து கடிக்கின்றனர்.

இப்பூதங்கள் குறித்து ஏராளமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்கின்றனர்.பொதுமக்களால் இரு இடங்களில் பிடித்துக் கொடுக்கப்பட்ட பூதங்களை விடுதலை செய்து இருக்கின்றார்கள்.


கிறிஸ் பூதங்களின் நடவடிக்கைகளுக்கு பொலிஸார் உதவி, ஒத்தாசைகள் வழங்குகின்றனர் என்கிற சந்தேகத்தில் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்ட சம்பவங்களும் இடம்பெற்று உள்ளன.


கிறிஸ் பூதம் ஒருவரை பொலிஸார் விடுவித்தனர் என்கிற சந்தேகத்தில் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி மக்கள் பொலிஸ் நிலையம் மீது செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட அறுவர் காயப்பட்டு இருக்கின்றார்கள்.

கிறிஸ் பூதங்கள் என்று பொதுமக்களால் அப்புத்தளைத் தோட்டத்தில் அடையாளம் காணப்பட்ட இருவரை சில ஆட்கள் கடந்த புதன்கிழமை அடித்துக் கொன்று இருக்கின்றார்கள்.கிறிஸ் பூதங்களை தேடி காட்டுப் பகுதியில் அலைந்து திரிந்த 22 வயது இளைஞன் ஒருவர் காட்டுப் பன்றிகளுக்கு வைக்கப்பட்டு இருந்த மின்சாரப் பொறியில் தவறுதலாக சிக்கி உயிர் இழந்து உள்ளார்.

கிறிஸ் பூதங்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் சுமார் 30 இடம்பெற்று உள்ளன.

பெருந்தோட்டப் பிரதேசங்கள், கிழக்கு மாகாண கரையோர பிரதேசங்கள் ஆகியவற்றிலேயே கிறிஸ் பூதங்களில் ஊடுருவல்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன.

கிறிஸ் பூதங்கள் என்கிற சந்தேகத்தில் கடந்த மாதம் 47 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.


பொதுமக்கள் வர்ணிக்கின்றபடியாக கிறிஸ் பூதங்கள் என்று உண்மையில் யாரும் கிடையாது, திருடுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிலர் கைவரிசைகள் காட்டுகின்றார்கள்,

மனச் சம நிலை பாதிக்கப்பட்ட சிலரும் கிறிஸ் பூதங்களாக வேடம் போடுகின்றார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்து உள்ளார்.


இலங்கையர்கள் மத்தியில் பேய்கள், பிசாசுகள், ஆவிகள் குறித்த நம்பிக்கைகள் காலம் காலமாக நிலவி வருகின்றன. சில கிராமங்களில் இந்நம்பிக்கைகள் இன்னமும் நீடித்து வருகின்றன.நோய்களை குணப்படுத்துதல், எதிரிகளை பழிவாங்குதல் போன்ற நடவடிக்கைகளை பேய்கள், பிசாசுகள், ஆவிகள் போன்றவற்றின் உதவிகளுடன் செய்யலாம் என்று நம்பப்படுகின்றது.



England ல் கொளுந்து விட்டு எரியும் கலவரம்- வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள்

லண்டன்: இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் தலைவிரித்தாடும் கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனராம்.
லண்டனில் தொடங்கிய கலவரம் இப்போது மான்செஸ்ட்ர், நாட்டிங்காம், பிர்மிங்காம், லிவர்பூல், பிரிஸ்டல் என பல நகரங்களுக்கும் பரவியுள்ளது.
இந்தக் கலவரம் வெடிக்க முதலில் ஒரு காரணம் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது காரணமே இல்லாமல் கலவரம் பரவி வருகிறது. கடைகளையும், வர்த்தக நிறுவனங்களையும் சூறையாடி வருகின்றனர் கலவரக்காரர்கள். இந்த வன்முறைக் கலவரத்தில் சிக்கி 3 ஆசியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக சீக்கியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறாத வகையில் இருந்து கொள்கின்றனர். பல இந்தியர்களுடைய வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதனால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பிற நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் மிகவும் முன்ஜாக்கிரதையாக வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கி்க் கிடக்கின்றனர்.

அலு்வலகங்களுக்குச் செல்வதையும் முடிந்தவரை தவிர்த்து வருகின்றனராம். ஈஸ்ட் ஹாம் பகுதியில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஹரீஷ் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் கூறுகையில், எங்களில் பெரும்பாலானவர்கள் அலுவலகம் செல்லாமல் தவிர்த்து வருகிறோம். சிலர் மட்டும் அலுவலகம் சென்றனர். எங்களது குடும்பத்தினருக்கு அவ்வப்போது போன் செய்து பத்திரமாக இருப்பதைத் தெரிவித்து வருகிறோம்

இப்போதைக்கு ஆட்களைக் குறி வைத்து லண்டனில் யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை. கடைகளை மட்டுமே சூறையாடி வருகின்றனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இருக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்றார்.

அதேபோல ஈழத் தமிழர்களும் வெளியே நடமாடுவதை முடிந்தவரை தவிர்க்கின்றனர். ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது இங்கிலாந்தில் வசித்து வரும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் லண்டனில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தியதது நினைவிருக்கலாம். அதேபோல ராஜபக்சே லண்டன் வந்தபோதும் அவரை எதிர்த்து விமான நிலையத்தையே கலங்கடித்தனர்.

இந்த நிலையில் தற்போதைய கலவரத்தைப் பயன்படுத்தி சிங்களர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் அல்லது கலவரகக்காரர்களுடன் இணைந்து தாக்கலாம் என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகவும், வனமுறையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். வெளியே போவதாக இருந்தாலும் கூட மிகுந்த பாதுகாப்புடன் போய் வருகின்றனராம்.

New Verson Playbookகை அறிமுகப்படுத்த Blackberry தீவிரம்

Blackberry upcoming product
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தகவல் தொடர்பு சாதனங்களை தயாரிப்பில் பிளாக்பெர்ரியை மிஞ்ச ஆளில்லை என்று கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம். மார்க்கெட்டில் அந்த நிறுவனம் இதுவரை அறிமுகப்படுத்தியுள்ள அத்துனை சாதனங்களுமே இதற்கு சாட்சி.

அதில் ஒன்று, பிளாக்பெர்ரி ப்ளேபுக். சகல தகவல் பரிமாற்ற வசதிகள் மட்டுமல்ல, அவற்றை வாடிக்கையாளர்கள் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு வடிவமைத்து வாடிக்கையாளர்களை கட்டிபோட்டு வைத்துள்ளது பிளாக்பெர்ரி.

எனினும், ப்ளேபுக் டேப்லெட்டில் சில குறைகள் இருப்பதை கண்டுபிடித்த அந்த நிறுவனம், அவற்றை களைந்து புதிய ப்ளேபுக் வெர்ஷனை விரைவில் வெளியிட உள்ளதாக வதந்திகள் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

புதிதாக வரும் ப்ளேபுக்-2 வெர்ஷன் டேப்லெட் முந்தைய ப்ளேபுக்கைவிட அசத்தலான அம்சங்களுடன் வரும் என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதிக துல்லியத்துடன் கூடிய 10 இஞ்ச் ஸ்கிரீன், கறுப்பு, வெள்ளை பேனல்கள் மற்றும் க்யூஎன்எக்ஸ் அப்டேட்டுன் வரும் புதிய ப்ளேபேக் மார்க்கெட்டில் சூறாவளியை கிளப்பும் என தெரிகிறது.
தவிர, இடையூறு இல்லா இன்டர்நெட் பிரவுசிங்கையும், எளிதாக அப்ளிகேஷன்கள் மற்றும் ஐகான்களை தேர்வு செய்யும் விதத்திலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய ப்ளேபுக்கை விட ப்ளேபுக்-2 விலையில் அதிக வேறுபாடு கொண்டிருக்காது என்றும் கருதப்படுகிறது.

500,000 Facebook கணக்குகளைத் திருடிய கில்லாடி கைது

‘Spam king’ என்று பிரபல்யமாக அழைக்கப்பட்ட நபர் ஒருவரை குடீஐ கைதுசெய்துள்ளது.

2008 நவம்பரிற்கும் 2009 மார்ச்சிற்குமிடையில் 500,000 மின்னஞ்சல்களைக் களவாடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான்.

நண்பர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 27 மில்லியன் ஒன்லைன் செய்திகளை இந்நபர் பயன்படுத்தியிருந்தார்.

செய்திகளுக்குள் உள்ள இணைப்பு முகவரிகளைத் (link) தெரிவுசெய்தால் ஒரு வழிகாட்டி தோன்றி அது ஒருவரது முழுப்பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைக் கேட்கும் ஓர் ஏமாற்று இணையத்தளத்திற்குள் அழைத்துச்செல்லும்.இறுதியில் அவர்களை அது மீண்டும் தங்களது பழைய தளத்திற்கே அழைத்துச்செல்லும். இதன்மூலம் வலஸ் குறிப்பிடத்தக்க இலாபத்தை அடைந்துள்ளான்.குற்றச்சாட்டின்படி, Facebook இன் மின்னஞ்சல் filter  களில் காணப்படும் பலவீனங்களில் தான் இத்திட்டம் தங்கியிருந்தது என்பது தெரியவந்தது.

இத்திட்டத்தினை முழுமையாக்க, இரண்டு Facebook கணக்குகளிற்கு இடையில் வலஸ் முதலில் தனது களவாடல் திறமையைப் பரிசோதித்துப் பார்த்திருக்கின்றான்.‘David Frederix’ இணையத்தளத்திலும் அதன் சட்டரீதியான நண்பனான ‘Sanford Masterwb Wallace’ இலும் போலியான Facebook  கணக்குகளைப் பயன்படுத்தியிருந்தான்.

இதனை அவன் Facebook  இன் வடிகட்டல் பொறியமைப்பிற்குள் நுழைந்து செல்லக் கூடியவாறு பல மின்னஞ்சல் செய்திகளை விதவிதமாக அனுப்பிப் பரிசோதித்தான்.இந்த வடிகட்டிகளுக்குள் அவன் நுழைந்ததும் அதனை ஏற்றுக்கொண்ட Facebook பயனாளர்களின் கணக்கிற்குள் ஒரு தன்னியக்கப் பதிவுச்செயற்பாட்டை மேற்கொண்டான்.

இதனால் அந்தப் பயனாளரின் நண்பர்களது பட்டியலைப் பதிந்து பின்னர் அவர்கள் ஒவ்வொருவரதும் Facebook பக்கங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பினான்.வலஸ் தற்போது முழுவதுமாக 11 ஏமாற்று வேலைகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளான்.2009 ஒக்ரோபரில், ஒரு சமூக வலைத்தளத்திற்கு 711 மில்லியன் டொலர்கள் செலுத்துமாறு வலசிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால் இதனை வலஸ் செலுத்துவானென அந்நிறுவனம் எதிர்பார்க்கவில்லை.ஆனால் நீதிபதி அவருக்கு Facebook இற்குள் செல்லக்கக்கூடாது என்ற சட்டத்தினை விதித்திருந்தார்.

வலஸ் 1990களில் தான் ஒரு மின்னஞ்சல் திருடனாக வெளியுலகிற்கு அறிமுகமாகினான்.

அத்துடன் 2008 இல் MySpace  இனால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் 100,000 டொலரிற்குப் பிணையில் வெளிவந்தான்.குறித்த நபருக்கு ஒவ்வொரு குற்றங்களுக்கும் 250,000 டொலர் தண்டப்பணமும் 3 வருடச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஒரு பாதுகாப்பான சர்வதேசக் கணினிக்குச் சேதம் விளைவித்ததற்கான 3 குற்றங்களுக்கும் 10 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வலசின் கைதை ifij Facebook  இணையத்தளம் வரவேற்றுள்ளது.

Want Money ? just Click and register

மதம் மாறினார் நயன்தாரா!

Nayanthara
பிரபுதேவாவைத் திருமணம் செய்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நடிகை நயன்தாரா.

15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 3 குழந்தைகள் பிறந்து, அதில் மூத்த குழந்தை இறந்த நிலையில் விவாகரத்து செய்தார் பிரபு தேவா.

முஸ்லிமாக இருந்த ரம்லத், பிரபுதேவாவுக்காக மதம் மாறி லதா என்று புதுப்பெயர் சூடிக் கொண்டார். ஆனால் நயன்தாரா மீதான காதல் காரணமாக ரம்லத்தை உதறினார் பிரபுதேவா.

சமீபத்தில் தான் ரம்லத் - பிரபுதேவா விவாகரத்தை அறிவித்தது குடும்ப நல நீதிமன்றம். இப்போது பிரபுதேவா அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிறார். நயன்தாரா தான் இவருக்கு மனைவியாகப் போகிறார். ஆனால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரபுதேவாவுக்காக நயன்தாரா மதம் மாறுவாரா அல்லது நயனுக்காக பிரபுதேவா மதம் மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்போது தனக்காக மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவாவுக்காக, மதம் மாறிவிட்டார் நயன்தாரா. நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் முறைப்படி இந்து மதத்துக்கு மாறினார். நேற்று கொச்சியிலிருந்து சென்னை வந்த நயன்தாரா, ஆரிய சமாஜத்தில் வேத விற்பன்னர்கள் முன்னிலையில் ”சுத்த பரிகாரம்” செய்தார். பி்ன்னர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி, இந்துவாக மாறினார்.

இந்து மதத்துக்கு மாறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் உணர்வதாக நயன்தாரா பின்னர் தெரிவித்தார். இந்த மத மாற்றத்துக்கு யார் வற்புறுத்தலும் காரணமல்ல என்றும் இது எனது தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் அவர் தெரிவித்தார்.

நயன்தாராவின் நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக வைக்கப்பட்ட இந்த நயன்தாரா என்ற பெயரையே இனி தன் நிரந்தரப் பெயராக பயன்படுத்தப் போகிறாராம்பிரபுதேவாவைத் திருமணம் செய்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நடிகை நயன்தாரா.

15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 3 குழந்தைகள் பிறந்து, அதில் மூத்த குழந்தை இறந்த நிலையில் விவாகரத்து செய்தார் பிரபு தேவா.

முஸ்லிமாக இருந்த ரம்லத், பிரபுதேவாவுக்காக மதம் மாறி லதா என்று புதுப்பெயர் சூடிக் கொண்டார். ஆனால் நயன்தாரா மீதான காதல் காரணமாக ரம்லத்தை உதறினார் பிரபுதேவா.

சமீபத்தில் தான் ரம்லத் - பிரபுதேவா விவாகரத்தை அறிவித்தது குடும்ப நல நீதிமன்றம். இப்போது பிரபுதேவா அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிறார். நயன்தாரா தான் இவருக்கு மனைவியாகப் போகிறார். ஆனால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரபுதேவாவுக்காக நயன்தாரா மதம் மாறுவாரா அல்லது நயனுக்காக பிரபுதேவா மதம் மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்போது தனக்காக மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவாவுக்காக, மதம் மாறிவிட்டார் நயன்தாரா. நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் முறைப்படி இந்து மதத்துக்கு மாறினார். நேற்று கொச்சியிலிருந்து சென்னை வந்த நயன்தாரா, ஆரிய சமாஜத்தில் வேத விற்பன்னர்கள் முன்னிலையில் ”சுத்த பரிகாரம்” செய்தார். பி்ன்னர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி, இந்துவாக மாறினார்.

இந்து மதத்துக்கு மாறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் உணர்வதாக நயன்தாரா பின்னர் தெரிவித்தார். இந்த மத மாற்றத்துக்கு யார் வற்புறுத்தலும் காரணமல்ல என்றும் இது எனது தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் அவர் தெரிவித்தார்.

நயன்தாராவின் நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக வைக்கப்பட்ட இந்த நயன்தாரா என்ற பெயரையே இனி தன் நிரந்தரப் பெயராக பயன்படுத்தப் போகிறாராம்.

தொலைந்து போன Fileஐ கண்டுபிடிப்பது எப்படி?

Start பட்டன் அழுத்தி Search என்பதில் கிளிக் செய்தி்டவும். கிடைக்கும் பாக்ஸில் What do you want to search for ? என்று கொடுக்கப்பட்டு்ள்ள பிரிவில் For File or Folders என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.


1. உங்களுக்கு அந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது *.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt மற்றும் *.exe என என்னவாக வேண்டுமானாலும். இருக்கலாம். பைலை முதல் பிரிவில் தரவும்.

2. பெயரும் தெரியவில்லை ; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.


3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது. என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை Look IN : என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம். எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.


4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனை பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்


இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்..

செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம் : விஞ்ஞானிகள்

செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும். அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. 

விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். 30 நாட்களில் காய்த்து குலுங்கத் துவங்கும். ஒரு ரோபோவை பூமியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கி, நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் தோட்டத்தைப் பராமரிக்க முடியும். இவ்வாறு ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார்கள் விஞ்ஞானிகள்

Photoshop Tutorials - ஒரே நிமிடத்தில் சூரியோதயம்

Photoshop Examples
புகைப்படங்களை கலைநயம் மிக்க படைப்பாக மாற்ற போட்டோஷாப் பல வகைகளில் நமக்கு உதவி புரிகிறது.அந்த வகையில் இன்று பார்க்கப்போவது சூரியோதயம்.ஒரே நிமிடத்தில் முடிந்து விடக்கூடிய மிக எளிமையான படைப்பு.




மேலே இரண்டு படங்கள் உள்ளது. இதில் உதாரணமாக படம் ஒன்று நமக்கு பிடித்த படம்.ஆனால் படம் இரண்டில் உள்ளது போல் சூரியோதயம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் கவலையே பட வேண்டாம்.ஒரே நிமிடத்தில் அதை செய்து விடலாம்.அதை எப்படி என்பதை பார்ப்போம்.
போட்டோஷாப்பில் இரண்டு படங்களையும் திறந்து கொள்ளுங்கள்.

படங்களை திறந்து கொண்டவுடன் Image - Adjustment - Match Color ஐ Click செய்யுங்கள். வரும் விண்டோவில்  Luminance-100, Color Intensity-100, Fade-50 என மதிப்பு கொடுங்கள். fade ன் மதிப்பை உங்கள் விருப்பதுக்கு கூட்டிக்குறைத்துக்கொள்ளலாம்.கீழே Source என்பதில் படம்-2 ஐ தேர்வு செய்யுங்கள்.அதாவது நமக்கு தேவையான கலர் உள்ள படம்.இபோழுது OK செய்யவும்.



Ok தந்தவுடன் நமக்கு கிடைத்த படம்.கீழே பாருங்கள்.இதில் Fade ன் மதிப்பு 25 தந்துள்ளேன்.
 







Google ன் புதிய Laptop

குகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள்.

இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.


இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொருள் இல்லாமல் எங்கோ சேமித்து வைத்திருக்கும் மென்பொருளை இண்டர்நெட் மூலமாக பயன்படுத்துவதால் லேப்டாப்புகளின் விலை குறையும், அதிக செயல்திறன் தேவையில்லை, அடுத்ததாக விரைவாக லேப்டாப்பை உயிர்பித்து விடலாம், பேட்டரி எனப்படும் மின்சக்தி நேரமும் நீட்டிக்கலாம் என்பது போன்ற பலன்கள் கிடையாது என்று கூறுகின்றனர்.


இந்த கருத்தை பிரதிபலிப்பவர் தொழில்நுட்ப நிபுணரான ரூபர்ட் குட்வின்ஸ், இவர் ‘இசட் டி நெட்’என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். அத்தோடு இந்த புதிய நுட்பத்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். ஏனென்றால் தற்சமயம் உலகத்தில் இருக்கும் லேப்டாப்புகளில் 90 சதவீதம், இவர்களின் மென்பொருள் தயாரிப்புகளால் தான் இயங்கி வருகின்றன.


அதே சமயம், இண்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே பெரும்பாலான செயல்களை இந்த லேப்டாப்பில் செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இன்னமும் உலகத்தின் பல பகுதிகளில் இண்டர்நெட் சேவை என்பது முழுதாக கிடைக்கவில்லை, அல்லது தங்கு தடையின்றி கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்களால் குகிளின் குரோம்நோட்புக் விற்பனை எப்படி இருக்கும் என்பது சரியாக கூற முடியவில்லை.


இதற்கிடையே, ஒரு சில நிபுணர்கள் குகிளின் இந்த லேப்டாப் புரட்சி ஒன்றும் கிடையாது, இது ஒரு பரிணாம வளர்ச்சி தான், ஏனென்றால் இன்றுள்ள நவீன செல்போன்கள், டேப்ளட் கம்ப்யூட்டர்கள் எனப்படும் சின்னஞ்சிறு கம்ப்யூட்டர்கள் எல்லாம் இந்த முறையிலேயே இயங்கி வருகின்றன என்பதை குறிப்பிடுகின்றனர்.


நன்றி பிபிசி

கார் விபத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய Mr.Bean!

நகைச்சுவையின் மூலமாக உலகையே கட்டிப் போட்டவர் மிஸ்டர் பீன். இவரது இயற்பெயர் ரோவன் அட்கின்ஸன். 56 வயதான இவர் பி.பி.சி.யின் பிளாகேடர் என்னும் தொலைக்காட்சி தொடரில் மிஸ்டர் பீன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

பிரிட்டனில் உள்ள பீட்டர்போரோ என்னுமிடத்துக்கு அருகேயுள்ள கேம்ப்ரிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் இவர் பயணம் செய்த இவரது மாக்லொரேன் சூப்பர் கார் விபத்துக்குள்ளானது.

இதில் லேசான காயங்களுடன் பீன் தப்பித்தார். இவர் ஒரு கார் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.பி.சி.யின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக அவர் சென்று கொண்டிருந்தபோது ஒரு விளக்குக் கம்பத்துக்கும், ஒரு மரத்துக்கும் நடுவில் கார் மோதி தீப்பிடித்தது.
தீப்பிடித்து நொறுங்கிப்போன காரின் இடிபாடுகளிலிருந்து எழுந்து பீன் உயிர் தப்பியமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Computer USB PORT ஐ DISABLE செய்வது எப்படி ?

USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும். இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.

இதனை WINDOWS இல் DISABLE செய்வது பற்றி பார்ப்போம் 

REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,

RUN----->TYPE " regedit "
REGISTRY EDITOR சென்றவுடன்,

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor  
மேலே உள்ள PATH க்கு சென்று பின்,
START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும்,
அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்றவேண்டும். (படம் 2).
பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை ("3") நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .

 

Hard Disk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய

அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். 
வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். 
வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.
மென்பொருளை தரவிறக்க Click


Mobile Phone மூலம் பணபரிமாற்றம் செய்பவரா? - கவனம் ஆபத்து!!!

செல்போனில் பண பரிவர்த்னை - இன்று தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் நமது வாழ்க்கைமுறையும், வேலையும் மிக எளிமையகியுள்ளது என்றால் அது மிகை ஆகாது. அதே நேரம் அவையால் விளையும் ஆபத்துகள் கற்பனைக்கு எட்டாதவை.

இன்று வங்கியின் பண பரிவர்த்தினை மற்றும் பண பரி மாற்றத்தினை வீட்டில் இருந்தோ அல்லது நாம் இருக்கும் இடத்தில் இருந்தோ கைப்பேசியின் (செல்போன்) மூலம் செய்யும் அளவிற்கு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது. அதே சமயம் இதனால் விளையும் அபாயங்களை நாம் அறியாதது நம் அறியமையே.
  

இந்த பரிவர்த்தினை ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் நவீன ரக கைப்பேசியின் மூலம் செய்யப்படுகிறது. இவ்வகையான கைப்பேசிகள் இயங்கு தளங்களின் (Operatin System) அடிப்படையில் இயங்குகின்றன. இது போன்ற பண மாற்றத்தின் போது நாம் உபயோகிக்கும் கடவுச்சொல் (பாஸ் வோர்ட்) எனும் ரகசிய குறியீடுகளை (வைரஸ்) எனும் கணினி நஞ்சுகாலாள் திருடப் படுகின்றன. இதனால் நம் வங்கியின் பணத்தை இழக்க நேரிடும்.


இந்த தற்கால வைரஸ் ஜித்மோ (Zitmo) என்று அழைக்கப்படுகிறது. இவை மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு பெரிய சவாலாக திகழ்கின்றன. இந்த வகையான வைரஸ்கள் இணைய தளங்களிலிருந்து தரவிருக்கம் செய்யும்போது கைப்பேசியினுள் வந்துவிடுகின்றன. இவை உள் நுழைந்தவுடன் இயங்கு தளத்தின் கட்டுப்பாட்டினை இவைகளின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகின்றன. மற்ற நேரங்களில் அமைதியாகவே உள்ளன, உபயோகிப்பாளர் வங்கியின் இணையத்திற்கு சென்றவுடன் இவை வேலை செய்யகின்றன.

சந்தையில் இன்று மிகவும் விற்பணையாகும் ஆன்றாய்டு இயங்குதளம் கொண்ட கைப்பேசிகள் இது போன்ற வைரஸ்களால் எளிதாக பாதிககப்படுகின்றன என்பது அறிவியல் வல்லுநர்களின் கருத்து. அது மட்டும் இன்றி ஆப்பிள் போன்ற விலை உயர்ந்த போன்களையும் இவை விட்டு வைக்கவில்லை. இது பற்றி முன்னணி வங்கியின் மேலாளர் பேசுகையில், வ்ங்கியால் முடிந்த அளவிற்கு பாதுகாப்பினை வழங்கி வருகிறது. உபயோகிப்பாளர் தங்கள் பணத்தின் மீது கவனம் கொண்டு கடவுச்சொல்லை யாரலும் கனிக்க முடியாதவாறு உபயோகிக்க வேண்டும், (Public Wi-FI) எனப்படும் பொதுவான பிணையத்தினை தவிர்க்கவும். அவ்வப்போது மென்பொருளினை மேம்படுத்தி (Update) உபயோகிக்கவும்.

நியூசிலாந்து அருகே பயங்கர நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

நியூசிலாந்து நாட்டுக்கு அருகே உள்ள கெர்மடெக் தீவு பகுதியில் இன்று காலை 7 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அந்த தீவு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.6 என்ற அளவுக்கு பதிவாகி இருந்தது.
 
நில நடுக்கம் காரணமாக கெர்மடெக் தீவு குலுங்கியது. நியூசிலாந்து, டோங்கா நாடுகளிலும் கடும் அதிர்வு ஏற்பட்டது. கட்டிடங்கள் ஆடின. இதையடுத்து மக்கள் அலறியடித்தப்படி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் நொறுங்கின. அதில் சிக்கி ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். ஆனால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் குறித்து முழுமையான தகவல்கள் வரவில்லை.
 
கடலுக்கு அடியில் 30 மைல் தொலைவுக்குள் நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததால், சுனாமி பேரலைகள் தாக்கக்கூடும் என்று தகவல் பரவியது. இதையடுத்து கடல் தண்ணீர் போக்கை அளவிட்ட பசிபிக் சுனாமி மைய ஆராய்ச்சியாளர்கள் சுனாமி பேரலைகள் தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர். 500 மைல் தொலைவில் உள்ள நியூசிலாந்து, டோங்காவை சுமார் 2 மணி நேரத்துக்குள் சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஆனால் 8 மணி அளவில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து, டோங்கா நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Windows XP install செய்ய கற்றுக்கொள்ளுங்கள்

கணினி வைரஸ், ட்ரோஜன் போன்றவைகளால் பாதிக்கப்படும் போது,  கணினியின் இயங்கு தளத்தை (operating system) மறுமுறை நிறுவ (install) வேண்டியதிருக்கும். 

கணினி வைத்திருப்போர் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களில், Windows XP நிறுவும் முறையும் ஒன்று.   தெரியாதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  பலருக்கும் Windows XP நிறுவும் வழிமுறை  தெரிந்திருக்கும்.  இருப்பினும், கணினியை  பார்மட் (format) செய்து மறுமுறை நிறுவும் போது,  தகவல்கள் அழிந்து விடுமோ,  கணினி செயலிழந்து போய் விடுமோ என்ற பயம் இருக்கும்.
கணினி வைத்திருப்போருக்கும்,  ஹார்ட்வேர் தொழிலில் இருக்கும் புதியவர்களுக்கும் "Windows XP setup Simulator" என்ற அருமையான,  பயனுள்ள மென்பொருள் உள்ளது.   ஒரு கணினியை பார்மட் செய்து, windows xp-ஐ நிறுவும் போது எப்படி கணினி செயல்படுமோ,  அதே அமைப்பை இந்த மென்பொருள் ஏற்படுத்தித் தரும்.  ஆகையால், எந்த வித பயமும் இன்றி, நீங்கள் நன்றாக பயிற்சி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும்  விண்டோஸை நிறுவுலாம், நீக்கலாம்.

குறிப்பு:  ESC கீயைத் தட்டி எப்போது வேண்டுமானாலும்,  இந்த மென்பொருளில் இருந்து வெளியேறலாம்.  இதனால் கணினிக்கு எந்த பாதிப்பும் வராது.