9வது மாடியிலிருந்து தாயின் கையிலிருந்த குழந்தை தவறி விழுந்து பலி

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 9 வது மாடியில், தாயின் மடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை பலியானது.

பெங்களூருவில் ஜே.பி.நகர் பகுதியில் உள்ள ஆதர்ஷ் ரிதம் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 9 வது மாடியில் வசிப்பவர் விஷால் காஷ்யப். மென்பொருள் பொறியாளர். இவரது மனைவி அம்ருதா. இவர்களது மகன் அர்மான் (ஒன்றரை வயது). 

நேற்று காலை அம்ருதா, குழந்தை அர்மானுக்கு உணவு ஊட்டுவதற்காக வராண்டா பகுதிக்கு வந்தார். பால்கனி வழியாக வேடிக்கை காட்டிய வண்ணம் உணவு ஊட்டிய போது, குழந்தை அர்மான் திடீரென குதித்தான். இதில் அம்ருதாவின் கையில் இருந்து தவறிய குழந்தை, 9 வது மாடியில் இருந்து, 8 வது மாடியில் உள்ள வராண்டா சுவரில் மோதியபடி தரையில் வந்து விழுந்து அந்த இடத்திலேயே இறந்தான். 
குழந்தையின் நிலையை கண்ட அம்ருதா மயங்கி விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டொக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஜே.பி.நகர் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.



0 comments:

Post a Comment